MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 1000 யூனிட் வரை இலவச மின்சாரம்.! யாருக்கெல்லாம்? குஷியில் துள்ளிக்குதிக்கும் தொழிலாளர்கள்!

1000 யூனிட் வரை இலவச மின்சாரம்.! யாருக்கெல்லாம்? குஷியில் துள்ளிக்குதிக்கும் தொழிலாளர்கள்!

Free Electricity: தமிழக அரசு விசைத்தறி தொழிலாளர்களின் நலனுக்காக, கட்டணமில்லா மின்சார வரம்பை 750 யூனிட்டிலிருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 1,37,512 விசைத்தறி நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 03 2026, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசின் இலவச மின்சாரம்
Image Credit : our own

தமிழக அரசின் இலவச மின்சாரம்

தமிழக அரசு பொதுமக்களுக்காக பல்வேறு அதிரடி சரவெடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதை திமுக அரசும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தமிழக அரசு விவசாயிகளின் நீர்பாசன வசதிக்காக 24 மணி நேரமும் இலவச முன்முனை மின்சாரம் வழங்கி வருகிறது. 2025ம் ஆண்டில் 50,000 புதிய மின்ணைப்புகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.

25
விசைத்தறி தொழிலாளர்கள்
Image Credit : our own

விசைத்தறி தொழிலாளர்கள்

இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முக்கியமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள விசைத்தறி நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சார வரம்பு 750 யூனிட்டிலிருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

Related Articles

Related image1
ஜியோ, ஏர்டெல்-க்கு போட்டியாக மாறுகிறதா பிஎஸ்என்எல்? கிராமங்கள் தோறும் இனி இன்டர்நெட் புரட்சி! வெளியான அதிரடி அறிவிப்பு!
Related image2
விவசாயிகள் அக்கவுண்டில் கொட்டப்போகும் பணம்.! 15ம் தேதி அடிக்கப்போகுது ஜாக்பாட்! அரசு சூப்பர் அறிவிப்பு
35
1.37 விசைத்தறி நுகர்வோர்கள் பயன்
Image Credit : our own

1.37 விசைத்தறி நுகர்வோர்கள் பயன்

இந்த மாற்றம் இரண்டு மாத மின் பில்லிங் காலத்திற்கு பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 1,37,512 விசைத்தறி நுகர்வோர்கள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர்.

45
விசைத்தறி தொழிலாளர்களுக்கு பயன்
Image Credit : our own

விசைத்தறி தொழிலாளர்களுக்கு பயன்

விசைத்தறி தொழில் மாநிலத்தின் முக்கிய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனை நம்பி பல லட்சம் குடும்பங்கள் உள்ளன. மின்சாரம் இவர்களுக்கான முக்கியமான உற்பத்தி மூலமாக இருப்பதால், கட்டணமில்லா மின்சார வரம்பை உயர்த்துவது அவர்களின் பொருளாதார சுமையை குறைத்து உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று அரசு நம்புகிறது.

55
தமிழ்நாடு அரசு
Image Credit : our own

தமிழ்நாடு அரசு

TANGEDCO வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு மாநில அரசு வழங்கும் இத்தகைய உதவிகள், அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதோடு, மாநிலத்தின் பாரம்பரிய தொழில்கள் வளர்ச்சிக்கும் புதிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி மூலம் தமிழ்நாடு அரசு தொழிலாளர்களின் நலனில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
இலவச மின்சாரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தேர்தல் களத்தில் அதிரடி காட்டும் விஜய்..! 234 தொகுதிகளிலும் விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு
Recommended image2
பதவி விலகுகிறேன்..! தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை.. அண்ணாமலை திடீர் அறிவிப்பு..!
Recommended image3
விவசாயிகள் அக்கவுண்டில் கொட்டப்போகும் பணம்.! 15ம் தேதி அடிக்கப்போகுது ஜாக்பாட்! அரசு சூப்பர் அறிவிப்பு
Related Stories
Recommended image1
ஜியோ, ஏர்டெல்-க்கு போட்டியாக மாறுகிறதா பிஎஸ்என்எல்? கிராமங்கள் தோறும் இனி இன்டர்நெட் புரட்சி! வெளியான அதிரடி அறிவிப்பு!
Recommended image2
விவசாயிகள் அக்கவுண்டில் கொட்டப்போகும் பணம்.! 15ம் தேதி அடிக்கப்போகுது ஜாக்பாட்! அரசு சூப்பர் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved