MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இவ்வளவு நடந்தும் வீட்டில் இருந்து வெளியே வராத விஜய்.! 10 நாளுக்கு பிறகு வீடியோ காலில் ஆறுதலா.? கொதிக்கும் கரூர் மக்கள்

இவ்வளவு நடந்தும் வீட்டில் இருந்து வெளியே வராத விஜய்.! 10 நாளுக்கு பிறகு வீடியோ காலில் ஆறுதலா.? கொதிக்கும் கரூர் மக்கள்

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில், 10 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியுள்ளார். நேரடியாக வராமல் தொலைபேசியில் பேசியது கரூர் மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 07 2025, 12:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : ANI

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் உரிய இடம் வழங்கவில்லை, பாதுகாப்பு வழங்கவில்லையென இதற்கு காரணம் தவெக தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. போலீஸ் தரப்போ தங்கள் தரப்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒரு சதவிகிதம் கூட தவெக செயல்படுத்தவில்லையெனவும், 

10ஆயிரம் பேர் வருவார்கள் என அனுமதி கடிதம் கொடுத்து விட்டு 27ஆயிரம் பேர் கூடியதாக போலீஸ் தரப்பும் தெரிவித்துள்ளது. மேலும் மதியம் 12 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவித்து விட்டு இரவு 7 மணிக்கு தான் தவெக தலைவர் விஜய் வந்ததாகவும் போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Image Credit : Google

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்று இதுவரை 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தவெக நிர்வாகிகள் ஒருவர் கூட பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று எந்த வித ஆறுதலும் தெரிவிக்கவில்லை. கரூர் சம்பவம் நடைபெற்ற அடுத்த நிமிடமே முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.

 விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் சென்று விட்டார். புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல் குமார் ஆகியோர மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் கைது செய்யப்பட்டு விடுவோமா என்ற அசத்தில் நீதிமன்த்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Related Articles

Related image1
தலை மறைவு வெற்றிக் கழகம்..! போட்டு பொளக்கும் திமுக ஆதரவாளர்கள்
Related image2
அதிமுக +தவெக + பிஜேபி சேர்ந்தாலும் திமுக தான் வெற்றி பெரும்..!ஸ்டராங்கா சொல்லும் திருமாவளவன்
34
Image Credit : Asianet News

எனவே தவெக மாவட்ட செயலாளர்களிடம் விஜய் நேரடியாக பேசி வருவதாகவும், யாரும் முடங்கிவிட வேண்டாம் என தெரிவித்திருந்தாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோகாலில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய், 

உயிரிழந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார். நடக்கக்கூடாதது நடந்து விட்டது, எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். இதே போல பாதிக்கப்பட்ட மற்ற மக்களிடமும் வீடியோ காலில் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை விஜய் பேசி ஆறுதல் கூறியுள்ளார்

44
Image Credit : Asianet News

இதனிடையே கரூர் சம்பவத்தில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தான் பல ஆயிரம் குவிந்தனர். விஜய்யை பார்க்க வேண்டும் என்ற கூட்டத்தில் சிக்கி உயிழந்தவர்களை நேரடியாக கூட சந்திக்காமல் சம்பவம் நடைபெற்று 10 நாட்களுக்கு பிறகு தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் தெரிவித்து இருப்பது கரூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Related Stories
Recommended image1
தலை மறைவு வெற்றிக் கழகம்..! போட்டு பொளக்கும் திமுக ஆதரவாளர்கள்
Recommended image2
அதிமுக +தவெக + பிஜேபி சேர்ந்தாலும் திமுக தான் வெற்றி பெரும்..!ஸ்டராங்கா சொல்லும் திருமாவளவன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved