MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை..! உதயநிதி சொன்ன குட் நியூஸ்..! பெண்கள் குஷி!

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை..! உதயநிதி சொன்ன குட் நியூஸ்..! பெண்கள் குஷி!

மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பித்த பெண்கள் தங்களுக்கு கிடைக்குமா? என எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் குட்நியூஸ் தெரிவித்துள்ளார். 

1 Min read
Rayar r
Published : Nov 03 2025, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
Image Credit : our own

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

தமிழ்நாடு அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் ரேஷன் கார்டு வைத்துள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது.

24
புதிதாக விண்ணப்பித்த பெண்கள்
Image Credit : tndipr

புதிதாக விண்ணப்பித்த பெண்கள்

அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோரைத் தவிர மற்ற குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர்.

Related Articles

Related image1
மகளிர் உரிமைத் தொகை.. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.1,000 எப்போது? தேதியை அறிவித்த உதயநிதி!
Related image2
மகளிர் உரிமைத் தொகை ரூ.30,000! எப்போது கொடுக்க போறீங்க ஸ்டாலின்? விடாமல் ரவுண்ட் கட்டும் நயினார் நாகேந்திரன்!
34
சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட உதயநிதி
Image Credit : magalir urimai thogai

சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட உதயநிதி

புதிதாக மகளிர் உரிமைத் தொகை வேண்டி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மட்டும் சுமார் 28 லட்சம் மகளிர் விண்ணப்பங்களை அளித்தனர். ''புதிதாக மகளிர் உரிமைத் தொகை கோரிய விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி வருவாய்த்துறை மூலமாக நடந்து வருகின்றன. 

இந்த பணிகள் முடிந்து தகுதியான மகளிருக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்'' என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்தார்.

44
உதயநிதி சொன்ன குட்நியூஸ்
Image Credit : magalir urimai thogai

உதயநிதி சொன்ன குட்நியூஸ்

இந்த நிலையில், விடுபட்டவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராணிப்பேட்டையில் அரசு விழாவில் பேசிய உதயநிதி, ''தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடியிலும் கூட மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த திட்டம் மீது முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார். விடுபட்டவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு
உதயநிதி ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved