MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நூற்றாண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை! இன்னும் 3 மணி நேரத்திற்கு விடாதாம்! வெதர்மேன் வார்னிங்!

நூற்றாண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை! இன்னும் 3 மணி நேரத்திற்கு விடாதாம்! வெதர்மேன் வார்னிங்!

வடகிழக்கு பருவமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்ததுடன், பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 16 2025, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வடகிழக்கு பருவமழை
Image Credit : Google

வடகிழக்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததை அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று இரவு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் அதிகாலை வரை விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது.

25
பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : our own

பள்ளிகளுக்கு விடுமுறை

இதனால் எங்கு பார்த்தாலும் சாலையில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் ராமநாதபுர மாவட்டத்திற்கும் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.

Related Articles

Related image1
தீபாவளிக்கு முன் மெகா சர்ப்ரைஸ்! பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்!
Related image2
Diwali Bonus: ஜாக்பாட்.! தீபாவளி போனஸ் மட்டுமல்ல கருணை தொகை குறித்த முக்கிய அறிவிப்பும் வெளியானது!
35
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெள்ள நீர்
Image Credit : Google

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெள்ள நீர்

தமிழகத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது விடிய விடிய பெய்த கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

45
 தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
Image Credit : google

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும். பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறையும். அதேநேரத்தில் இந்த இரு மாவட்டங்களின் உட்புறப் பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று நண்பகல் முதல் மாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளது.

55
சென்னையில் மழை எச்சரிக்கை
Image Credit : Google

சென்னையில் மழை எச்சரிக்கை

சென்னையில் இன்று காலை பிரகாசமான சூரிய ஒளியுடன் கூடிய வானிலை காணப்படுகிறது. இருப்பினும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது . குறிப்பாக இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அலுவலகம் திரும்பும்போது மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெயிலின் ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு! இனிமே குடை இல்லாமல் வெளியே போவாதீங்க! மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்
Recommended image2
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image3
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Related Stories
Recommended image1
தீபாவளிக்கு முன் மெகா சர்ப்ரைஸ்! பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்!
Recommended image2
Diwali Bonus: ஜாக்பாட்.! தீபாவளி போனஸ் மட்டுமல்ல கருணை தொகை குறித்த முக்கிய அறிவிப்பும் வெளியானது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved