MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி, பக்தர்கள் கடலில் குளிக்க 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.

1 Min read
vinoth kumar
Published : Aug 28 2025, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வேளாங்கண்ணி
Image Credit : our own

வேளாங்கண்ணி

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி அதாவது நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

24
புனித ஆரோக்கிய மாதா விழா
Image Credit : Asianet News

புனித ஆரோக்கிய மாதா விழா

இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க பத்து நாட்கள் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வேளாங்கண்ணி கடற்கரை அழகை ரசிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்! தமிழக அரசுக்கு என்ஜிஓ சங்கம் சொன்ன சூப்பர் யோசனை
Related image2
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியானது! யார் யாருக்கு எப்போது எக்ஸாம்! முழு விவரம் இதோ!
34
கடலில் குளிக்க தடை
Image Credit : Asianet News

கடலில் குளிக்க தடை

குறிப்பாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் போடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடலில் தடையை மீறி யாரேணும் குளிக்க முற்பட்டால் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

44
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
Image Credit : our own

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

மேலும் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நாளை நாகை, கீழ்வேளூர் வட்டார பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிகள் விடுமுறை
கல்லூரி
விடுமுறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved