MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்கள்! எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு!

TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்கள்! எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு பதிவேற்றம் நிறைவடைந்துள்ளது. 9,491 காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Nov 29 2024, 04:40 PM IST| Updated : Nov 29 2024, 04:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TNPSC

TNPSC

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.  இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். 

25
TNPSC Group 4 Exam

TNPSC Group 4 Exam


முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று 3 முறை அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9,491 காலி பணியிடங்கள் உயர்த்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியானது. 

35
certificate verification

certificate verification

இதனையடுத்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது. அதாவது வகுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் ( Onscreen Certificate Verification) செய்ய வேண்டியது அவசியம். 

45
TNPSC News

TNPSC News

அதன்படி சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் கடந்த நவம்பர் 7ம் தேதி வெளியிட்டது. அதன்படி சான்றிதழ் பதிவேற்றம் நவம்பர் 9 முதல் தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் முடிந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு தயாராகி வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

55
TNPSC Group 4 Counseling

TNPSC Group 4 Counseling

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது எக்ஸ் தளத்தில்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. முதல் நாளில் 200 பேர், அடுத்தடுத்த நாட்களில் 200 பேர் என கலந்தாய்வுக்கு அழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி.என்.பி.எஸ்.சி.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved