- Home
- Tamil Nadu News
- TN Budget 2026 : மின்கட்டணத்தை குறைக்க அரசே பணம் தருது... புதிய திட்டத்தின் முழு விவரம்!
TN Budget 2026 : மின்கட்டணத்தை குறைக்க அரசே பணம் தருது... புதிய திட்டத்தின் முழு விவரம்!
TN Budget 2026 : தமிழக அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மின்சாரத் துறையில் பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பொதுமக்களின் மின்கட்டணச் சுமையை குறைப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.

மின்கட்டணத்தை குறைக்க புதிய சோலார் திட்டம்
மின்கட்டணத்தை குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் 'வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், வீடுகளில் சூரிய மின்பலகை (Rooftop Solar Panel) அமைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சூரிய மின்பலகைகள் மூலம் வீட்டிலேயே மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த முடிவதால், மாதந்தோறும் செலுத்தும் மின்கட்டணத்தை கணிசமாக குறைக்கலாம். இதற்காகவே அரசே ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : TN Budget 2026 : இலவச ஆடு, மாடுகள் வழங்கும் புதிய திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இந்த திட்டத்தால் என்ன பயன்?
வீட்டுக் கூரையில் சூரிய மின்பலகைகள் பொருத்தப்பட்டால்,
- வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தை நீங்களே உற்பத்தி செய்யலாம்.
- மாதாந்திர மின்கட்டணத்தை குறைக்க முடியும்.
- கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் வலையமைப்பில் வழங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த சுத்தமான எரிசக்தி பயன்பாடு அதிகரிக்கும்.
இதையும் படிங்க : Hotel Mirrors : ஹோட்டல் பெட்டுக்கு எதிரே கண்ணாடி ஏன்? இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா?
சென்னை முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள்
மின்சார சேவைகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை மாநகரில் உள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோருக்கும் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டரின் பயன்கள்
ஸ்மார்ட் மீட்டர் மூலம்,
- நிகழ்நேர மின் நுகர்வை கண்காணிக்க முடியும்.
- துல்லியமான மின் கட்டண கணக்கீடு கிடைக்கும்.
- மீட்டர் வாசிப்பு தானியங்கி முறையில் நடைபெறும்.
- மின் சேவைகள் வேகமாகவும் வெளிப்படையாகவும் கிடைக்கும்.
- மின் விநியோக மேலாண்மை மேலும் மேம்படும்.
இதையும் படிங்க : Shasha Rajayoga : ராஜயோகங்களில் நம்பர் ஒன்! சச ராஜயோகத்தால் அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு இந்த 4 ராசிகள் தொட்டதெல்லாம் ஹிட்டு!
பட்ஜெட்டின் முக்கிய மின்சார அறிவிப்புகள்
- வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகம்.
- சூரிய மின்பலகை அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்.
- திட்டத்திற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
- சென்னை மாநகரின் அனைத்து மின் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள்.
- மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர் விரிவாக்கம்.
மின்கட்டணச் சுமையை குறைப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் மின்சார சேவைகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. திட்டங்களுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் செயல்படுத்தும் நடைமுறைகள் தொடர்பான விரிவான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : Small Business : வீட்டிலிருந்தே தொடங்கலாம்... நல்ல வருமானம் தரும் 5 சிறிய உணவுத் தொழில்கள்!
