MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு கொண்டாட்டம்.! தேதி நீட்டிப்பு- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

மாணவர்களுக்கு கொண்டாட்டம்.! தேதி நீட்டிப்பு- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

உயர்கல்வியில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு படிப்பானது தொடங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Ajmal Khan
Published : May 28 2025, 07:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உயர்கல்வியில் ஆர்வமோடு சேரும் மாணவர்கள்
Image Credit : our own

உயர்கல்வியில் ஆர்வமோடு சேரும் மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் உயர்கல்வியில் சேரவுள்ள மாணவர்களுக்கு கல்லூரி முதலாம் ஆண்டு தொடங்கும் நாள் மற்றும் அரசு கலைக்கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள தகவலிலில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 7.05.2025 தொடங்கி 27.05.2025-இல் முடிவடைவதால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025-இல் மீண்டும் தொடங்கும் என தகவல் தெரிவித்துள்ளார்.

25
கலை அறிவியல் கல்லூரியில் சேர கால அவகாசம்
Image Credit : our own

கலை அறிவியல் கல்லூரியில் சேர கால அவகாசம்

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது: அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-26-கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 07.05.2025 அன்று முதல் 27.05.2025 வரை, www.tngasa.in என்ற இணையதள வாயிலாக பெறப்பட்டது. இதுவரை 2.25,705 விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,08,619 மாணவிகள், 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,84,762 மாணாக்கர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

Related Articles

Related image1
இலவசமாக அதுவும் மாதம் ரூ.1000 உதவித்தொகையுடன் ரோபோடிக்ஸ் , ட்ரோன் படிக்க ஆசையா?
Related image2
கால்நடை மருத்துவராக ஆசையா? TANUVAS இளங்கலை மாணவர் சேர்க்கை 2025-26 ஆரம்பம்: முழுவிவரம்...
35
தரவரிசைப்பட்டியில் கலந்தாய்வு எப்போது.?
Image Credit : our own

தரவரிசைப்பட்டியில் கலந்தாய்வு எப்போது.?

சிறப்புப் பிரிவு மாணாக்கர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 29.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். கல்லூரித் தகவல் பலகைகளில் தரவரிசைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டு, கல்லூரி இணைய தளங்களிலும் வெளியிடப்படும். மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்விற்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மாணாக்கர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும்.

45
விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
Image Credit : our own

விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு

27.05.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் 30.05.2025 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 30.06.2025-இல் துவங்கும்

29.05.2025- சிறப்புப் பிரிவு மாணாக்கர்களுக்கான தர வரிசைப் பட்டியல் கல்லூரிகளின் இணைய தளங்களிலும், கல்லூரி தகவல் பலகைகளிலும் வெளியிடப்படும்.

55
முதலாம் ஆண்டு எப்போது தொடக்கம்
Image Credit : our own

முதலாம் ஆண்டு எப்போது தொடக்கம்

30.05.2025- பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளின் இணைய தளங்களிலும், கல்லூரி தகவல் பலகைகளிலும் வெளியிடப்படும்.

02.06.2025 மற்றும் 03.06.2025- சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள் / விளையாட்டு வீரர்கள் / முன்னாள் இராணுவத்தினர் அந்தமான், நிகோபார் தமிழ் மாணாக்கர்கள் / தேசிய மாணவர் படை/ பாதுகாப்புப் படைவீரர்கள்)

04.06.2025 முதல் 14.06.2025 வரை பொதுக் கலந்தாய்வு தொடர் கலந்தாய்வு மற்றும் மாணாக்கர் சேர்க்கை

30.06.2025 முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் துவங்கும் நாள்என உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கல்லூரி
கல்வி
தமிழ்நாடு அரசு
விண்ணப்பம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved