MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்து வேன் நேருக்கு நேர் மோதல்! பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!

கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்து வேன் நேருக்கு நேர் மோதல்! பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!

கர்நாடகாவில் இருந்து வேளாண்கண்ணி நோக்கிச் சென்ற வேன், தஞ்சை அருகே அரசு பேருந்து மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min read
vinoth kumar
Published : May 22 2025, 07:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அரசு பேருந்து வேன் நேருக்கு நேர் மோதல்
Image Credit : Google

அரசு பேருந்து வேன் நேருக்கு நேர் மோதல்

கர்நாடகாவில் இருந்து 11 பேருடன் டெம்போ டிராவல்ஸ் வேன் ஒன்று வேளாண்கண்ணி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. வேன் தஞ்சை செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்துக்கொண்டிருந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் திருச்சியை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

23
4 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Image Credit : our own

4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Articles

Related image1
இடிக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையம்! 2 வாரத்தில் திறக்கப்படும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! எந்த இடத்தில் தெரியுமா?
Related image2
சென்னையில் அதிர்ச்சி! 2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பதற்றம்! அலறி கூச்சலிட்ட பயணிகள்!
33
பலி எண்ணிக்கை உயர்வு
Image Credit : our own

பலி எண்ணிக்கை உயர்வு

இதில், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் தெரியவந்துள்ளது. ஆரோக்கியதாஸ் (48) ஜான் பாஸ்கோ (63), நளினி (50), வேன் டிரைவர் ஜெகதீசன் (48), செல்சியா பெயர் விபரம் மட்டும் கிடைத்துள்ளது. பேருந்தில் இருந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா வந்த இடத்தில் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
தமிழ்நாடு
காவல்
தஞ்சாவூர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved