MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக அரசு அறிவித்த 20% சதவீத போனஸ்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

தமிழக அரசு அறிவித்த 20% சதவீத போனஸ்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5775 பேர் பயனடைவார்கள்.

1 Min read
Ramya s
Published : Oct 29 2024, 10:55 AM IST| Updated : Oct 29 2024, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து உத்தரவிட்டுள்ளது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு போன்ஸ் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

24

தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்முறையை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சூப்பர் சான்ஸ்.! தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டைக்கு சிறப்பு ரயில்.! உடனே முன்பதிவு செய்யுங்க

34

அந்த வகையில் தற்போது கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2023-2024-ம் ஆண்டு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி II ஆகிய இரண்டு சர்க்கரை ஆலைகளுக்கு 8.33% சதவீதம் போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

44

தமிழ்நாட்டில் மீதமுள்ள 14  கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 8.33% போனஸ், கருணை தொகை 1.6% என மொத்தம் 10% போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5775 பேர் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராக்கெட் வேகத்தில் சென்ற விமான கட்டணம்.! மதுரைக்கு பிளைட் டிக்கெட் எவ்வளவு தெரியுமா.?

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved