MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது! பதற்றம்! போலீஸ் குவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது! பதற்றம்! போலீஸ் குவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பேரணி நடத்தியது. பேரணியில் பங்கேற்ற அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1 Min read
vinoth kumar
Published : Dec 20 2024, 08:54 PM IST| Updated : Dec 20 2024, 09:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Coimbatore blast

Coimbatore blast

கோவை தெற்கு உக்கடம், பொன்விழா நகரில் உள்ள ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பாஷா (74). தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவராக இருந்தார். கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக எஸ்.ஏ.பாஷா கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

24
Basha Death

Basha Death

இதனையடுத்து 30 ஆண்டுகளாக  சிறையில் இருந்து வந்தார். இதனிடையே வயது மூப்பு காரணமாக அவ்வப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியில் வந்தார். 

34
Annamalai

Annamalai

ஆனால் தொடர்ந்து அவரது உடல் மோசமடைந்ததை அடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி  கடந்த  திங்கட்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலமானது காவல்துறை அனுமதியுடன் கடந்த 17ம் தேதி நடந்தது. இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியதற்கு தமிழக பாஜக மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

44
Annamalai Arrest

Annamalai Arrest

இந்நிலையில் கோவை பாஷாவின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த காவல்துறையை கண்டித்து கோவையில் கண்டன பேரணி நடைபெறும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனையடுத்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.  இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
சென்னை உயர் நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved