MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 18 வயது வரை மாதம் ரூ.2000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

18 வயது வரை மாதம் ரூ.2000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 ஊக்கத்தொகை வழங்கும் ஆதரவு கரஙகள் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

1 Min read
Rayar r
Published : Jul 27 2025, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilnadu Aatharavu Karangal Scheme
Image Credit : GOOGLE

Tamilnadu Aatharavu Karangal Scheme

தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில் தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பும் வளர்ந்து வரும் குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் "அன்பு கரங்கள்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

24
 அன்பு கரங்கள் ஆதரவு திட்டம்
Image Credit : istock

அன்பு கரங்கள் ஆதரவு திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் தாய், தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர அரசு சார்பில் இந்த ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சருக்கு பறந்த முக்கிய கோரிக்கை
Related image2
அட்டகாசமான அடல் ஓய்வூதியத் திட்டம்.! 8 கோடி சந்தாதாரர்கள் இணைந்து சாதனை.!
34
யார் விண்ணப்பிக்கலாம்?
Image Credit : Google

யார் விண்ணப்பிக்கலாம்?

ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) ஆகியோர் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

44
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
Image Credit : our own

விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டையின் நகல், குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்), குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவை "அன்பு கரங்கள்" திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களாகும்.

எப்படி விண்ணப்பிப்பது?

"அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் மாவட்டங்களில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved