MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை திருவள்ளூர் மட்டுமல்ல; மொத்தம் 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை திருவள்ளூர் மட்டுமல்ல; மொத்தம் 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

TN Schools Leave : கனமழை காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (அக்டோபர் 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Ansgar R
Published : Oct 14 2024, 11:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Heavy Rain in Chennai

Heavy Rain in Chennai

வடகிழக்கு பருவமழை நாளை முதல் தமிழகத்தில் தொடங்க உள்ள நிலையில் முதல் நாளிலேயே தமிழகத்தின் அநேக இடங்களிலும், தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மிதமான முதல் அதிகனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே சென்னையில் இன்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதே போல கோவையிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் கனமழை பெய்து சுரங்க பாதைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கும் காட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது. மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொட்டப் போகுது மழை; நீங்கள் வீட்டில் செய்ய வேண்டியது இதுதான்; மறக்க வேண்டாம்

24
Leave for schools

Leave for schools

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இறுதியில் தான் வடகிழக்கு பருவமழை தமிழகத்தை நோக்கி நகரும். ஆனால் இந்த முறை 15 நாட்களுக்கு முன்னதாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நாளை அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களில் அதிகனத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும். தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதற்கு ஏற்றார் போல தமிழக அரசும் தொடர்ச்சியாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

34
School Students

School Students

ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் ஐடி நிறுவனங்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வண்ணம் திறன் கொண்ட நிறுவனங்கள், தங்களுடைய பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறது. அதேபோல தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறது. மேலும் வீடுகளில் தங்களுடைய வாகனங்களை நிறுத்த பயந்து, மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்தும் பொதுமக்களிடம் போலீசார் அப்ராதம் விதிக்க கூடாது என்றும், சென்னை போக்குவரத்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே சிலரிடம் கார்களை மேம்பாலத்தில் நிறுத்துவதற்காக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

44
School Leave

School Leave

கனமழை காரணமாக ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை அக்டோபர் 15ம் தேதி அதிகன மழை எதிர்பார்க்கப்படுவதால் கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இப்பொழுது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பில்.. கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை நாளை அக்டோபர் 15ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்காது என்றும். அதேபோல விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்படாமல், பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அறிவிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் வெளுத்துக்கட்டும் கனமழை; மதுரை, சிவகங்கையில் மீண்டும் புயல் - எச்சரிக்கும் வெதர் மேன்!

About the Author

AR
Ansgar R
தமிழ்நாடு வானிலை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved