MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக மக்களுக்கு அரசின் சர்ப்ரைஸ் கிப்ட்! மகளிர் உரிமைத் தொகைக்கு ஆவணம் தேவையில்லையாம்

தமிழக மக்களுக்கு அரசின் சர்ப்ரைஸ் கிப்ட்! மகளிர் உரிமைத் தொகைக்கு ஆவணம் தேவையில்லையாம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பெற வருமான வரிச்சான்றிதழைக் கட்டாயம் இணைக்க வேண்டுமா என்பது தொடர்பான சந்தேகத்திற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Jan 27 2025, 11:06 AM IST| Updated : Jan 27 2025, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மக்களுக்கு தமிழக அரசின் சர்ப்ரைஸ் கிப்ட்! மகளிர் உரிமைத் தொகைக்கு ஆவணம் தேவையில்லையாம்

மக்களுக்கு தமிழக அரசின் சர்ப்ரைஸ் கிப்ட்! மகளிர் உரிமைத் தொகைக்கு ஆவணம் தேவையில்லையாம்

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் மாநில அரசுகளால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

24
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி

ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த முறை விடுபட்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்களும் இந்த முறை விண்ணப்பிக்கலாம்.

34
மகளிர் உரிமைத் தொகை

மகளிர் உரிமைத் தொகை

விண்ணப்பிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரின் வீட்டிற்கும் அந்தந்தப் பகுதி தாசில்தார் நேரில் வந்து பார்வையிட்டு விண்ணப்பதாரர் திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவர் தானா என்பதை உறுதிப் படுத்துவார். அதன் அடிப்படையில் விண்ணப்பதாரருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதி

உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதி

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். புன்செய் நிலமாக இருந்தால் 10 ஏக்கருக்குள்ளும், நன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கருக்குள்ளும் வைத்திருக்கலாம். ஆண்டுக் வீட்டு மின்சார உபயோகம் 3600 யூனிட்டுகளைத் தாண்டக் கூடாது. குடும்ப வருமானத்திற்கு தனியாக வருமானச் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொழில் வரி செலுத்துவோர், சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ப்பிக்க முடியாது. உரிமைத் தொகை விண்ணப்பத்துடன் வருமானச் சான்றிதழை இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.208 கோடியில் கோவையில் அமைந்த பிரமாண்ட செம்மொழி பூங்கா.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Recommended image2
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு எங்கிருந்து எத்தனை பேருந்து? எப்போது இயக்கம்! வெளியான அறிவிப்பு
Recommended image3
நிலம் வாங்கப் போறீங்களா?.. தமிழக அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்! இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved