MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ஜாக்பாட்.! அள்ளிக்கொடுக்கப்படும் கடன் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ஜாக்பாட்.! அள்ளிக்கொடுக்கப்படும் கடன் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கி வருகிறது. 2021-2025 வரை சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,21,415.40 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

1 Min read
Ajmal Khan
Published : Jul 21 2025, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மகளிர் சுய உதவிக்குழுவிற்கான கடன் திட்டம்
Image Credit : google

மகளிர் சுய உதவிக்குழுவிற்கான கடன் திட்டம்

தமிழ்நாடு அரசு, மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கிய செயல்பாட்டினையே முதன்மை நோக்கமாகக் கொண்டு அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் என்ற ஒரு தனி நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. 

சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அவைகளின் தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

23
மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன்
Image Credit : our own

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன்

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-2022ஆம் நிதி ஆண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.52 கோடி, 2022-2023ஆம் நிதி ஆண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642.01 கோடி, 2023-2024ஆம் நிதி ஆண்டில் 4,79,350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,074.76 கோடி, 2024-2025ஆம் நிதி ஆண்டில் 4,84,659 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35,189.87 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது

Related Articles

Related image1
ஒரே வாரத்தில் கொத்தாக வரும் 3 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலி தான்
Related image2
என்ன பெரிய ஏர்போர்ட்... வந்து பாருங்க பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட்... அமெரிக்காவை விஞ்சும் அதிசயம்!
33
1,21,415.40 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு
Image Credit : tndipr

1,21,415.40 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு

2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, 18.07.2025 வரை 1,04,538 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 13,58,994 உறுப்பினர்களுக்கு 9,113.24 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நான்காண்டுகளில் 19,26,496 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 448 சுய உதவிக் குழு மகளிருக்கு 1,21,415.40 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்து, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகை
பெண் அதிகாரம்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved