MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தாட்கோ கடனுதவி திட்டம்! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அட்டகாசமான குட்நியூஸ்.!

தாட்கோ கடனுதவி திட்டம்! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அட்டகாசமான குட்நியூஸ்.!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோர்களாக மாற்ற மானியத்துடன் கடன்களை வழங்குகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 04 2026, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 மானியத்துடன் கூடிய கடன்கள்
Image Credit : google

மானியத்துடன் கூடிய கடன்கள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ ஆதிதிராவிடர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்குகிறது.

முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM -ARISE) என்ற திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.75.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆண்கள் 2726 நபர்களுக்கும் மகளிர் 1226ஆக மொத்தம் 3952 பயனாளிகளுக்கு புதுமையான திட்டங்களுக்கு (Innovative Project) ரூ.74.75 கோடி மானியத்துடன் கூடிய கடன் விடுவிக்கப்பட்டு சுய தொழில் செய்து வருகிறார்கள்.

25
மொத்தம் 4687 பயனாளிகளுக்கு ரூ.8975.44 இலட்சம் மானியம்
Image Credit : Asianet News

மொத்தம் 4687 பயனாளிகளுக்கு ரூ.8975.44 இலட்சம் மானியம்

கடந்த ஆண்டுகளில் நான்கு சக்கர வாகனம்(கனரக, இலகுரக) 1203 பயனாளிகளுக்கு ரூ. 3711.79 இலட்சமும், மூன்று சக்கர வாகனம் 648 பயனாளிகளுக்கு ரூ.833.73 இலட்சமும், மின்சாதன பொருட்கள் மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் செய்ய 447 பயனாளிகளுக்கு ரூ.843.31 இலட்சமும், கடைகள்(தையலகம், அழகு நிலையம், மளிகை, எழுதுபொருட்கள் நிலையம் மற்றும் பல) தொழில்கள் செய்ய 1600 பயனாளிகளுக்கு ரூ.2774.42 இலட்சமும், பால்பன்ணை அமைத்தல் தொழில் செய்ய 566 பயனாளிகளுக்கு ரூ.317.81 இலட்சமும் மற்றும் இதர தொழில்ளுக்கு 223 பயனாளிகளுக்கு ரூ.494.38 இலட்சமும் என மொத்தம் 4687 பயனாளிகளுக்கு ரூ.8975.44 இலட்சம் மானியத்துடன் கூடிய கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
மொபைலில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க மக்களே! தமிழகம் முழுவதும் இன்று 8 மணி நேரம் மின்தடை!
Related image2
பெண்களுக்கு ஜாக்பாட்.. தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பு.. ரூ.10,00,000 அள்ளிக்கொடுக்கும் அரசு..!
35
பிரதமரின் ஆதிதிராவிடர் முன்னேற்ற திட்டம்
Image Credit : Google

பிரதமரின் ஆதிதிராவிடர் முன்னேற்ற திட்டம்

பிரதமரின் ஆதிதிராவிடர் முன்னேற்ற திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.66.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1666 ஆண்களுக்கும் 5810 மகளிர்களுக்கும் ஆக மொத்தம் 7476 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் விடுவிக்கப்பட்டு சுய தொழில் செய்து வருகிறார்கள்.

45
சிறு வணிக கடன் திட்டம்
Image Credit : SCH

சிறு வணிக கடன் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) தமிழ் நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975ன் கீழ் படி பதிவு செய்த TAHDCO Adi Dravidar Tribal Advancement Society (TATAS) என்ற பெயரில் சமூக அமைப்புகளை உருவாக்கி இத்திட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் 1189 பயனாளிகளுக்கு ரூ.7.39 கோடியும் கடந்த ஆண்டுகளில் 1408 பயனாளிகளுக்கு ரூ. 7.74 கோடியும், ஆக மொத்தம் 2596 பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ.15.13 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இத்திட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் 162 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடியும் கடந்த ஆண்டுகளில் 1352 பயனாளிகளுக்கு ரூ. 12.73 கோடியும், ஆக மொத்தம் 1514 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.14.35 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டு அவர்களின் சுய தொழில் வாழ்வதாரத்தை மேம்படுத்தப்பட்டு உள்ளது.

55
பொலிவு பராமரிப்பு பெட்டகம்
Image Credit : magalir urimai thogai

பொலிவு பராமரிப்பு பெட்டகம்

தாட்கோ வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த, 60 மகளிர் சுய உதவிக் குழுவினரைக் கொண்டு சமூக நீதி விடுதியில், தங்கிப்பயிலும் கல்லுாரி மாணவர்களுக்கு, குளியல் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சலவை தூள், சலவைசோப்பு, உள்ளிட்ட ஏழு பொருட்கள் அடங்கிய, பொலிவு பராமரிப்பு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிதியாண்டில் தமிழ்நாடு அரசு ரூ. 75 கோடியும், ஒன்றிய அரசு ரூ. 37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதமே முழுமையாக செலவிடப்பட்டுவிட்டது. இதன் வாயிலாக மேற்கண்ட திட்டத்திற்கு இந்தியாவிலேயே செலவிடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. ஆதிதிராவிடர் பழங்குடியினர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு தனி கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வதாரத்தை மேன்மைப்படுத்திட இவ்வரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெண் அதிகாரம்
பெண்கள்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மொபைலில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க மக்களே! தமிழகம் முழுவதும் இன்று 8 மணி நேரம் மின்தடை!
Recommended image2
அதிமுக மாஜியுடன் திமுக அமைச்சரின் அட்ஜெஸ்ட்மெண்ட்..! குமுறும் அறிவாலயம்..!
Recommended image3
செல்லூர் ராஜுவை ஓட விட்ட திமுக அமைச்சர்..! அதிமுக- பாஜகவுக்குள் சிக்கல்..!
Related Stories
Recommended image1
மொபைலில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க மக்களே! தமிழகம் முழுவதும் இன்று 8 மணி நேரம் மின்தடை!
Recommended image2
பெண்களுக்கு ஜாக்பாட்.. தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பு.. ரூ.10,00,000 அள்ளிக்கொடுக்கும் அரசு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved