MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடுத்த 5 நாட்கள்! தமிழ்நாட்டை நோக்கி வரும் பேராபத்து? சென்னையில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்! வெதர்மேன் அப்டேட்

அடுத்த 5 நாட்கள்! தமிழ்நாட்டை நோக்கி வரும் பேராபத்து? சென்னையில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்! வெதர்மேன் அப்டேட்

குமரிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்வதால், தென் தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். சென்னை மற்றும் உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Nov 18 2025, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

இன்றும் நாளையும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்கு நோக்கி நகரும் போது, ​​ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டுள்ளதால் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

25
Image Credit : our own

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று காலை சென்னையில் சூரியன் தெரிந்தாலும், மழை மேகங்கள் வேகமாக நகர்ந்து வருகிறது. சென்னைக்கு வடக்கிலும், தெற்கிலும் மழை மேகங்கள் வட்டமடிக்க தொடங்கியுள்ளது. இன்று மட்டும் 20 முதல் 40 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
என் சாவுக்கு இவங்க இரண்டு பேரு தான் காரணம்! மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி டிஜிபிக்கு பகீர் கடிதம்
Related image2
உஷார் மக்களே! தப்பி தவறிகூட வெளியே போயிடாதீங்க! 11 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகும் மழை
35
Image Credit : our own

இன்று இரவு முதல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழகத்தில் மழை அதிகரிக்கும். டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி அரபிக்கடலுக்கு நகரும் போது, தென் தமிழகத்தில் மிக கனமழை ஏற்படும். தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.

45
Image Credit : our own

இன்றும் நாளையும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்கு நோக்கி நகரும் போது, ​​ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டுள்ளதால் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, குமரி மற்றும் நெல்லை ஆகியவை கனமழை இருக்கும் என தெரிவித்துள்ளார்.

55
Image Credit : Google

தற்போது குமரி கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலுக்கு நகர்ந்ததும், அடுத்த 5 நாட்களுக்கு பிறகு (சக்கரம்) புயல் சின்னம் வங்க கடலில் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த புயல் உருவானால் தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்து அடுத்த சில நாட்களில் தெளிவு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved