MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை, திருச்சி, மதுரை; கூட்ட நெரிசலை குறைக்க "முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்" - தென்னக ரயில்வே!

சென்னை, திருச்சி, மதுரை; கூட்ட நெரிசலை குறைக்க "முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்" - தென்னக ரயில்வே!

MEMU Express Trains : பண்டிகை காலத்தில் கூட்டநெரிசலை தடுக்க தென்னக ரயில்வே MEMU எனப்படும் முன்பதிவில்லா ரயில்களை இயக்கவுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 02 2024, 11:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
MEMU Trains

MEMU Trains

தமிழகத்தில் தீபாவளி திருநாள் மிக நீண்ட வார இறுதி நாளில் அமைந்ததால், தொடர்ச்சியாக விடுமுறைகள் கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அதிக அளவிலான பேருந்துகளை தமிழகம் முழுவதும் இயக்கிய நிலையில், தென்னக ரயில்வேயும் தமிழகம் முழுக்க சிறப்பு ரயில்களை இயக்கி வந்தது. இந்த சூழலில் மெமோ (MEMU) எனப்படும் மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் எக்ஸ்பிரஸ் ரயில்களை தாம்பரத்திலிருந்து திருச்சிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கும் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்து இருக்கிறது.

கனமழையில் நனைய தயாரா? 10 மாவட்டங்கள்; அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

24
Southern Railways

Southern Railways

தீபாவளி திருநாள் முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த இரண்டு ரயில்கள் செயல்படும் என்று தென்னக ரயில்வே வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. அதன்படி வண்டி எண் 06007, தாம்பரத்தில் இருந்து நாளை நவம்பர் மூன்றாம் தேதி காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு மதியம் 1.40 மணிக்கு சென்றடையும்.  அதே போல இந்த முன்பதிவு இல்லா ரயிலின், மற்றொரு பயணம் நவம்பர் மூன்றாம் தேதி இரவு தொடங்குகிறது.

34
Special Trains

Special Trains

வண்டி எண் 06008 என்ற அந்த ரயில், திருச்சியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த இரு வழி பயணத்திலும் இந்த ரயிலில் 12 பெட்டிகள் பொருத்தப்பட்டு இருக்கும் என்றும், அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் இந்த வண்டி முன்பதிவு இல்லாத வண்டியாகவும் செயல்படும்.

44
Tambaram

Tambaram

அதேபோல வண்டி எண் 06009, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (நவம்பர் 3) காலை 10.15 மணிக்கு புறப்படும். இந்த வண்டி மதுரைக்கு மாலை 6.30 மணிக்கு சென்றடையும். அதேபோல அதே வண்டி 06100 என்ற எண்ணில் நவம்பர் மூன்றாம் தேதி மாலை மதுரையில் இருந்து சுமார் 7:15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் விடியற்காலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்றடைகின்றது. இந்த வண்டியில் 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக செயல்படும். இந்த முறை அதிக அளவில் தீபாவளி திருநாள் விடுமுறை வந்த நிலையில் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் மீண்டும் சென்னை நோக்கி வர உள்ள நிலையில், இந்த இரண்டு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 

தொடர்ச்சியாக இது எத்தனை நாளைக்கு இயக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

Broadway Bus Stand Change: இடம் மாறும் பிராட்வே பேருந்து நிலையம்! எந்த இடம் தெரியுமா? வெளியான தகவல்!

About the Author

AR
Ansgar R
மதுரை
தென்னக இரயில்வே
திருச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved