- Home
- Tamil Nadu News
- தொடர்ச்சியாக வரும் 2 நாள் விடுமுறை.! பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்துதுறை
தொடர்ச்சியாக வரும் 2 நாள் விடுமுறை.! பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்துதுறை
வரும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொதுமக்களுக்கு வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து
வார முழுவதும் வேலை பார்க்கும் மக்களுக்கு வார இறுதி நாட்கள் தான் கொண்டாட்டமாக அமையும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்காக உறவினர்கள் வீட்டிற்கும், சுற்றுலாவிற்கும் பொதுமக்கள் செல்வார்கள். எனவே கடைசி நேர திட்டமிடலால் ரயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி வழிந்த நிலையில் அரசு பேருந்து தான் கை கொடுக்கும். அந்த வகையில் வரும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 25/07/2025 (வெள்ளிக்கிழமை) 26/07/2025 (சனிக்கிழமை) 27/07/2025 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி. ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 25/07/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 26/07/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது .
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,
கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையம்
கோயம்புத்தூர். சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 25/07/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 320 பேருந்துகளும், 26/07/2025(சனிக்கிழமை) 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 25/07/2025 மற்றும் 26/07/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,179 பயணிகளும் சனிக்கிழமை 2,530 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,124 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
முன்பதிவு செய்து பயணியுங்கள்
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.