MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! ஜூலை 7ம் தேதி விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! ஜூலை 7ம் தேதி விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

சோளிங்கர் யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 7ம் தேதி சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Jul 05 2025, 08:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளி மாணவர்கள்
Image Credit : Getty

பள்ளி மாணவர்கள்

பள்ளிக் கல்வியின் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்த வேலை நாட்கள், பொது விடுமுறை எத்தனை நாட்கள் என்பதை என்ற விவரத்தை வெளியிட்டது. அதில், 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பள்ளி வேலை நாட்கள் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24
உள்ளூர் விடுமுறை
Image Credit : our own

உள்ளூர் விடுமுறை

அரசு விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
சனிக்கிழமை அதுவுமா கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை! வெளியான லிஸ்ட்!
Related image2
என்னையே கட்சியிலிருந்து நீக்கிறியா! வண்டியை பனையூருக்கு திருப்பி இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த நிர்வாகி!
34
யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்
Image Credit : Google

யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்

இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான சிறிய மலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா ஜூலை 07ம் தேதி அன்று நடைபெறுகிறது.

44
பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : Google

பள்ளிகளுக்கு விடுமுறை

இதனை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்திற்கு மட்டும், சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூலை 07ம் தேதி (திங்கட்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூலை 19ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாகும். அன்றைய கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிகள் விடுமுறை
தமிழ்நாடு
பள்ளி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved