MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்கிட்ட கேட்காம செம்பரம்பாக்கம் ஏரியை ஏன் திறந்தீங்க? அரசை நடத்தும் அதிகாரிகள்.. பொங்கிய செல்வபெருந்தகை!

என்கிட்ட கேட்காம செம்பரம்பாக்கம் ஏரியை ஏன் திறந்தீங்க? அரசை நடத்தும் அதிகாரிகள்.. பொங்கிய செல்வபெருந்தகை!

என்னிடம் கேட்காமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது ஏன்? என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கோபத்தை வெளிப்படுத்தினார். அதிகாரிகள் அரசை நடத்துவதாக குற்றம்சாட்டினார்.

2 Min read
Author : Rayar r
Published : Oct 22 2025, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை
Image Credit : x

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உள்பட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கிருஷ்ணா நதிநீர் வருகை அதிகரித்ததாலும், புறநகர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகவும் சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் அதிவேகமாக அதிகரித்தது.

24
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு
Image Credit : google

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு

மொத்தம் 24 அடி உயரம் கொண்ட செம்பரபாக்கம் ஏரியில் நீர்மட்டம் 21.20 அடியை தொட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 4 மணிக்கு ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அடையாற்று ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நிலையை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

Related Articles

Related image1
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! சென்னையில் இந்த பகுதிகளில் வெள்ள அபாயம்! மக்களே உஷார்!
Related image2
நிரம்பும் செம்பரம்பாக்கம்.! கூடுதல் நீர் திறக்க போறாங்க- அலர்ட்டாகும் மக்கள்
34
செல்வபெருந்தகை ஆய்வு
Image Credit : x

செல்வபெருந்தகை ஆய்வு

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ செம்பரம்பாக்கம் ஏரியினை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரியில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது? எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது? என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது ஏன்? என அதிகாரிகளை வசைபாடினார்.

44
என்னிடம் கேட்காமல் திறந்தது ஏன்?
Image Credit : x

என்னிடம் கேட்காமல் திறந்தது ஏன்?

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை உடன் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், ''செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு முன்பு என்னிடம் தகவல் தெரிவித்து இருக்க வேண்டாமா? நீர்வளத்துறை அரசு துறை தானே. ஏரியை திறக்கும்போது மக்கள் பிரதிநிதிகளிடம் ஒரு வார்த்தை சொன்னால் என்ன? அதுதானே மரபு. காலம் காலமாக நான் தான் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து வைத்து வருகிறேன்.

அரசே அதிகாரிகளை நடத்தலாமா?

கடந்த ஆண்டும் என்னிடம் சொல்லாமல் ஏரியை திறந்து வைத்தீர்கள். தப்பு கிடையாது திறந்து வைங்க. நீங்களே மக்கள் பிரதிநிதியாக மாறுங்கள். இப்போது நான் தானே ஊர் ஊராக போகிறேன். மக்கள் கவனமாக இருக்கும்படி நான் தான் சொல்லப்போகிறேன். நீங்களே மக்கள் பிரநிதிநிதியாகி விடால் பிறகு எதற்கு அரசு? இதெல்லாம் தவறு இல்லையா? அதிகாரிகளே அரசை நடத்தலாமே. உங்க துறை (பொதுப்பணித்துறை) யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை'' என்று கடிந்து கொண்டார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தேசிய காங்கிரஸ்
மழை செய்திகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Recommended image2
தோழர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
Recommended image3
1.5 லட்சம் பேர் கலந்த திருமணம்.. 6 முறை ஆட்சி செய்த இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் மறுபக்கங்கள்
Related Stories
Recommended image1
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! சென்னையில் இந்த பகுதிகளில் வெள்ள அபாயம்! மக்களே உஷார்!
Recommended image2
நிரம்பும் செம்பரம்பாக்கம்.! கூடுதல் நீர் திறக்க போறாங்க- அலர்ட்டாகும் மக்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved