MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. முழு ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம்..

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. முழு ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம்..

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா முன்னிட்டு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 03 2026, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Asianet News

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பள்ளி கட்டிடங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்படவுள்ளதை அடுத்து கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படாத வகையில் முழு ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16ம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தேர்தல் பிரச்சாரத்தில் பேராபத்து? ஸ்டாலின், இபிஎஸ், விஜய்க்கு.. டெல்டா வெதர்மேன் வைத்த முக்கிய அலர்ட் மெசேஜ்
Related image2
Udhayanidhi Net Worth: அட! ரூ.21 கோடியை தாண்டாத உதயநிதி சொத்து மதிப்பு.. முழு விவரம் உள்ளே!
35
Image Credit : Asianet News

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 6-ம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ளது.

45
Image Credit : Asianet News

இந்த தேரோட்டதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

55
Image Credit : our own

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஏப்ரல் 6ம் தேதி திங்கள் கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியின்படி ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
விடுமுறை
தேர்வு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Digital Driving Licence: லைசென்ஸ் இனி கையில் வராது! இன்று முதல் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்
Recommended image2
Now Playing
சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
Recommended image3
Now Playing
திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
Related Stories
Recommended image1
தேர்தல் பிரச்சாரத்தில் பேராபத்து? ஸ்டாலின், இபிஎஸ், விஜய்க்கு.. டெல்டா வெதர்மேன் வைத்த முக்கிய அலர்ட் மெசேஜ்
Recommended image2
Udhayanidhi Net Worth: அட! ரூ.21 கோடியை தாண்டாத உதயநிதி சொத்து மதிப்பு.. முழு விவரம் உள்ளே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved