MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளிகளில் உடனே இதனை செய்திடுக.! ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

பள்ளிகளில் உடனே இதனை செய்திடுக.! ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

School Student : பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விரிவான நடவடிக்கைகள் குறித்த முக்கிய உத்தரவு. பள்ளி வளாக ஆய்வு, மரங்கள் அகற்றுதல், கட்டட சீரமைப்பு, சுகாதாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும்.

2 Min read
Ajmal Khan
Published : Dec 05 2024, 11:48 AM IST| Updated : Dec 05 2024, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
School Student

School Student

மழை வெள்ளத்தால் பள்ளிகள் பாதிப்பு

ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக  மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி, 

1. ஃபெங்கல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு அறிக்கை தங்கள் மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.

2. பள்ளி வளாகம் ,மைதானம் மற்றும் வகுப்பறைகளில் மழைநீர் தேங்கியிருப்பின் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பினை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பயன்பட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

26
School Safety

School Safety

பள்ளிகளில் சுற்றுச்சுவர் பாதிப்பு

3. பள்ளி வளாகத்தில் மரங்கள் ஏதேனும் விழுந்திருந்தால் அதனை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

4. பள்ளிக் கட்டடங்கள், சுற்றுச் சுவர் பாதிப்படைந்திருந்தால் அதனை சரிசெய்ய தேவையான உத்தேச மதிப்பீட்டினை தயார் செய்து அனுப்புதல் வேண்டும்.

5. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் தென்பெண்னையாற்றின் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தற்போதைய நிலையினை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

36
School Leave

School Leave

மழை நீரை அகற்ற உத்தரவு

6. உண்டு உறைவிடப் பள்ளிகள், KGBV பள்ளிகளையும் பார்வையிட்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் உறுதி படுத்த வேண்டும்.

7. ஆதிதிராவிடர் நலத்துறை. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்டபிறதுறைகள் கீழ் இயங்கும் பள்ளிகளிலும் சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அப்பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

8. பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரில் அடித்துவரப்பட்ட குப்பைகள் உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்தவும் அனைத்து வகுப்பறைகள் உள்ளிட்ட பள்ளி வளாக கட்டங்கள் முழுமையாக தூய்மை செய்து. பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் ஏதும் இல்லை என்பதனை உறுதி செய்திட வேண்டும்.

46
School Flood

School Flood

இடியும் நிலையில் கட்டிடங்கள்

9. மழையால் சேதமடைந்து இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள கட்டங்கள் உடனடியாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இடித்து அப்புறப்படுத்தப்படுத்தும்வரை அத்தகைய கட்டடங்களுக்கு அருகில் மாணவர்கள் செல்லாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

10. பள்ளிக்கு மாணவர்கள் தடையின்றி வருவதற்கு போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.

11. பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் உள்ள குடிநீர் கிணறு. கழிவுநீர் தேக்கத் தொட்டி, மழைநீர் சேகரிப்பு தோட்டி ஆகியவை தூய்மை செய்யபட்டு பாதுகாப்பாக உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.

56
Schools Leave

Schools Leave

மாணவர்களுக்கு கட்டுப்பாடு

12-தற்போது மழைநீர் பெருக்கத்தினால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால், மாணவர்கள் அதன் அருகில் செல்லுதல், அருகில் நின்று புகைப்படம் எடுத்தல் போன்றவை மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் என்பதனை உணர்ந்து அவற்றை தவிர்க்கவும். மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் போது, நீர் நிலைகள் அருகில் செல்லாமல் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளவும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளித் தலைமையாசிரியர்கள் காலை இறைவணக்க கூட்டத்தில் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

13. மாணவர்களின் பாடபுத்தகங்கள்.நோட்டுப்புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவை மழையின் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பின் அவைகளை அம்மாணவர்களுக்கு விரைந்து வழங்கிட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

66
school student

school student

சான்றிதழ் சேதம்- பட்டியல் தயார் செய்ய உத்தரவு

14.பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும். மின் கசிவு ஏற்படாமல் பாதுகாப்பை உறுதிபடுத்திடவும் தேவையெனில் மின் இணைப்பினை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

15. மாணவர்களின் சான்றிதழ்கள் (மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ) மழையால் சேதமடைந்திருந்தால் அம்மாணவர்களின் பெயர் பட்டியல் உரிய விவரத்துடன் தயார் செய்து அரசு தேர்வுகள் இயக்குநர் / வருவாய் துறை அலுவலர்களுக்கு அனுப்பி அச்சான்றிதழ்களை பெற தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கனமழை
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved