- Home
- Tamil Nadu News
- அக்டோபர் 20ம் தேதி வரை தான் டைம்! ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அக்டோபர் 20ம் தேதி வரை தான் டைம்! ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Education Department:தமிழக பள்ளிக் கல்வித்துறை, EMIS தளத்தில் மாணவர் தகவல்களைப் பராமரிக்கிறது. தற்போது, 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களில் உயர்கல்விக்கு சிறப்பு கவனம் தேவைப்படுவோரின் விவரங்களை அக்டோபர் 20-க்குள் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

எமிஸ்
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், கலை திருவிழாக்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9ம் முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
வகுப்பு ஆசிரியர்கள்
அந்த வகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கும், உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்யும் வகையிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சார்ந்த விவரங்களை பள்ளிக்கல்வித் துறையின் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மாவட்டங்களில் ஆசிரியர்கள் பதிவிடக்கூடிய தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இனிவரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் உயர்கல்வி சேர்க்கையை உறுதிசெய்ய வழிவகுக்கும். ஆகவே வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களின் விவரங்களை முழுமையாக பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள்
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் அடுத்த மாதம் அக்டோபர் 20ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படுவதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.