MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எங்கே போனாலும் விட மாட்டேங்குறாங்க.! சுற்றி வளைத்து பிடிக்கிறாங்க- கதறும் சவுக்கு சங்கர்

எங்கே போனாலும் விட மாட்டேங்குறாங்க.! சுற்றி வளைத்து பிடிக்கிறாங்க- கதறும் சவுக்கு சங்கர்

கும்பமேளா செல்லும் வழியில் சவுக்கு சங்கரின் காரை தெலுங்கானா போலீசார் மறித்துள்ளனர். சென்னை காவல்துறையின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அருண் ஐபிஎஸ் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாகவும் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

3 Min read
Ajmal Khan
Published : Feb 09 2025, 07:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
எங்கே போனாலும் விட மாட்டேங்குறாங்க.! சுற்றி வளைத்து பிடிக்கிறாங்க கதறும் சவுக்கு சங்கர்

எங்கே போனாலும் விட மாட்டேங்குறாங்க.! சுற்றி வளைத்து பிடிக்கிறாங்க- கதறும் சவுக்கு சங்கர்

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுங்களை கூறி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கிலும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து சட்ட போராட்டம் நடத்தியவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.  இந்த நிலையில் கும்பமேளாவிற்கு சென்ற தன்னை வழி மறித்து வெளி மாநில போலீசார் பிடிப்பதாக சவுக்கு சங்கர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  

27
சுற்றி வளைத்து பிடித்த தெலங்கானா போலீஸ்

சுற்றி வளைத்து பிடித்த தெலங்கானா போலீஸ்

கும்பமேளாவில் படபிடிப்பு நடத்துவதற்காக, சவுக்கு மீடியா கேமராமேன்களோடு சாலை மார்க்கமாக சென்னையிலிருந்து கிளம்பினோம். ஐதராபாத் தாண்டி, ராமையாபேட்டையில் ஒரு கடையில் மாலை 6 மணிக்கு தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, தெலுங்கானா காவல்துறை வாகனம் வந்து, எனது வாகனத்தின் எண்ணை சொல்லி, காவல் நிலையம் வருமாறு அழைத்தனர்.  எதற்கு என்று கேட்டபோது,

உங்கள் வாகனத்தை நிறுத்தி பறிமுதல் செய்யுமாறு சென்னை காவல்துறையிலிருந்து எங்களுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. உங்கள் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது என்று வாட்ஸப்பை காண்பித்தனர். அதில் எனது புகைப்படமும் எனது ஓட்டுனர் புகைப்படமும் இருந்தது.

37
போன்கள் பறிமுதல்

போன்கள் பறிமுதல்

உடனடியாக என்னை காவல்துறை வாகனத்தில் ஏற்றி, வாகனத்தை காவல்துறை ஓட்டுனர் எடுக்க ராமையாபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.  எங்கள் போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்நிலையம் சென்றதும் நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள் உங்களை சென்னை காவல்துறை தேடுகிறது என்று கேட்டனர். நீங்கள்தான் அழைத்து வந்தீர்கள்.

அதை நீங்கள்தான் கூற வேண்டும் என்றதும், எங்களுக்கு, உங்களையும் உங்கள் வாகனத்தையும் இந்த இடத்தில் தடுத்து நிறுத்த வேண்டும் என்று லொக்கேஷனோடு தகவல் வந்தது. அதனால் நிறுத்தினோம் என்று கூறி விட்டு, வாகனத்தில் மது இருக்கிறதா, போதைப்பொருள் இருக்கிறதா என்று இஞ்சின் வரை சோதனை செய்தனர்.

47
வாகனத்தை தடுத்த நிறுத்த

வாகனத்தை தடுத்த நிறுத்த

 எங்களையும், வாகனத்தையும் புகைப்படம் எடுத்து யாருக்கோ அனுப்பினர். எதுவுமே இல்லாததால், இருங்கள், என்ன விபரம் என்பதை கேட்டு விட்டு அனுப்புகிறோம் என்று ஆய்வாளர் கூறினார். பிறகு நான் ஒரு பத்திரிக்கையாளன், அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது பல வழக்குகள் போடப்பட்டன என்பதை விளக்கினேன்.

சவுக்கு மீடியா யுட்யூப் சேனலை திறந்து காண்பித்தேன். என் மீதான வழக்கு பற்றிய செய்தி இணைப்புகளை அவர் போனிலேயே காண்பித்தேன்.  பிறகு அவர் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உங்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தும்படி உத்தரவு சென்றுள்ளது என்று கூறினார்.

57
வாகனத்திற்கு அபராதம்

வாகனத்திற்கு அபராதம்

கொஞ்ச நேரம் காத்திருங்கள் என்று கூறி, இரண்டு மணி நேரம் கழித்து, வாகனத்தில் pollution சான்று இல்லை என்பதற்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்த போனை கொடுத்து நீங்கள் செல்லலாம் என்று அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வாளர் சொன்னபடியே, அடுத்து வந்த சுங்கச்சாவடியில் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையிடம் போன் செய்து விசாரித்த பின்பே செல்ல அனுமதித்தனர். பின்னர் வெளியே வந்து சென்னை காவல்துறையிலிருந்து யார் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தது என்று விசாரித்தபோது,

67
இதற்கெல்லாம் காரணம் அருண் ஐபிஎஸ் தான்

இதற்கெல்லாம் காரணம் அருண் ஐபிஎஸ் தான்

அருண் ஐபிஎஸ் 24 மணி நேரமும் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். எப்படி அடுத்த வழக்கில் கைது செய்யலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். உங்கள் போனும், உங்கள் ஓட்டுனர் போனும் லொகேஷன் கண்காணிக்கப்படுகிறது என்றும், டோல் ப்ளாஸா மூலமாக உங்கள் வாகனம் கண்காணிக்கப்படுகிறது என்றும், இதற்கான உத்தரவை பிறப்பித்தது அருண் என்றும் கூறினர். இத்தகைய அதிகாரிகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் முதல்வருக்கு 2026ல் தோல்வியை பெற்றுத் தராமல் இந்த அதிகாரிகள் ஓயப்போவது இல்லை.  ஆட்சியை இழந்தபின் முக.ஸ்டாலின் யோசிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

77
ஆணவத்தோடு அருண் ஐபிஎஸ்

ஆணவத்தோடு அருண் ஐபிஎஸ்

அருண் போன்ற அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டியது. அருணை விட பல மடங்கு திறமையான ஜாபர் சேட் போன்ற அதிகாரிகளே மண்ணைக் கவ்வியிருக்கின்றனர். அவருக்கு இருக்கும் அறிவில் 10 சதவிகிதம் கூட இல்லாத அருண் போன்றவர்கள் அழிவை நோக்கி பயணிக்கிறார்கள்.  அறிவிருக்கும் அதிகாரிகளே வீழ்ந்திருக்கிறார்கள்.  அறிவே இல்லாமல் ஆணவம் மட்டும் இருக்கும் அருண் போன்ற அதிகாரிகளின் வீழ்ச்சி மோசமானதாக இருக்கும். இத்தகைய தொல்லைகளால் சவுக்கு மீடியா தனது பணியை நிறுத்தப் போவது இல்லை என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சவுக்கு சங்கர்
குற்றம்
காவல்
தமிழ்நாடு அரசு
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved