- Home
- Tamil Nadu News
- 42 வழக்குகள்! இரண்டு முறை குண்டர் சட்டம்! யார் இந்த படப்பை குணா? மிரள வைக்கும் க்ரைம் ரிப்போர்ட்!
42 வழக்குகள்! இரண்டு முறை குண்டர் சட்டம்! யார் இந்த படப்பை குணா? மிரள வைக்கும் க்ரைம் ரிப்போர்ட்!
சரித்திர பதிவேடு குற்றவாளியும் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட படப்பை குணா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சரித்திர பதிவேடு குற்றவாளி.
Rowdy Padappai Guna
போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்ட நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமின் பெற்று வெளியே வந்த படப்பை குணா மீண்டும் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் செய்ததை அடுத்து இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே அலறிய தூத்துக்குடி! குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
Rowdy Padappai Guna Arrest
இந்நிலையில், மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை படப்பை குணா மிரட்டியதோடு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மோகன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சுங்குவார்சத்திரம் போலீசார் ரவுடி குணாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: தாய், குழந்தைகள் மரண வழக்கில் திடீர் திருப்பம்! குடும்பத்தையே கொலை செய்துவிட்டு கணவர் செய்த பகீர் சம்பவம்!
BJP Padappai guna
படப்பை குணா பாஜக காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.