MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி ஈசியா நகைக்கடன் பெறலாம்.! 10 விதிமுறைகள் மாற்றம்- பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரிசர்வ் வங்கி

இனி ஈசியா நகைக்கடன் பெறலாம்.! 10 விதிமுறைகள் மாற்றம்- பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி நகைக்கடன் தொடர்பான விதிமுறைகளைத் தளர்த்தி, சாமானிய மக்களுக்குக் கடன் பெறுவதை எளிதாக்கியுள்ளது. கடனாளியின் திருப்பிச் செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனைகள் கைவிடப்பட்டு, நகை மதிப்பீட்டின் அடிப்படையில் அதிக கடன் வழங்க வழிவகை.

2 Min read
Ajmal Khan
Published : Jun 08 2025, 07:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நகைக்கடன் பெற கட்டுப்பாடுகள்
Image Credit : Google

நகைக்கடன் பெற கட்டுப்பாடுகள்

நகைகளை அடகு வைப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு புதிய விதிமுறைகள் விதித்திருந்தது. இதனால் ஏழை எளிய மக்கள் நகைகளை அடகு வைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. எனவே விதிமுறைகளை மாற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்தது வந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேஷன் வெளியிட்டுள்ள பதிவில், தங்க நகைக்கடன் தொடர்பாக தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது.

26
நகைக்கடன் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
Image Credit : our own

நகைக்கடன் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு

இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று. இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும் என கூறியுள்ளார். மேலும் தங்க நகை கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Related Articles

Related image1
Gold Rate : உச்சத்துக்கு சென்ற தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Related image2
நகை அடகுக்கு 85% வரை கடன் - புதிய RBI அறிவிப்பு!
36
நகைக்கடன் விதிமுறைகள் தளர்வு
Image Credit : our own

நகைக்கடன் விதிமுறைகள் தளர்வு

1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.

2. ரூபாய் 2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் திருப்பி செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டது.

3. 2024 செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) தற்போது வழங்கப்படும்.

46
நகைக்கான ரசீது கேட்கப்படாது
Image Credit : our own

நகைக்கான ரசீது கேட்கப்படாது

4. அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்பட விருந்த தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை, கடன் செயல்முறை தொகை (processing fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது.

5. நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப் படியே கடன் வாங்குபவர்கள் "இந்த நகை என்னுடையது தான்" என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.

6. ரூபாய் 2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவீதம், ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75% கடன் வழங்கப்படும்.

56
உடனே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும்
Image Credit : our own

உடனே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும்

7. விவசாய கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற சரத்து நீக்கப்பட்டு விட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில் தான் கடன் தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கடனை வழங்கக் கூடாது.

8. நகை கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூபாய் 5000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் நகையை தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி கடன் வழங்கும் நிறுவனத்திடம் வேறு இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது.

66
தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் விதிமுறை தளர்வு
Image Credit : Google

தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் விதிமுறை தளர்வு

9. வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.

10. கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும்- குறிப்பாக கடனுக்கான- நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலே அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியிலே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தங்க நகை கடன்
தங்க நகை
இன்றைய தங்கம் விலை
இந்திய ரிசர்வ் வங்கி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved