MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அப்பாடா! தப்பித்த 4 டெல்டா மாவட்டங்கள்! வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்!

அப்பாடா! தப்பித்த 4 டெல்டா மாவட்டங்கள்! வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்!

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 27 2024, 11:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Heavy Rain

Heavy Rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே அதாவது கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து சென்னை, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை  பெய்து வந்தது. இந்நிலையில்  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறும்.  இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Tamilnadu Heavy rain

Tamilnadu Heavy rain

இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான அறிவிப்பு!

34
Fengal Cyclone

Fengal Cyclone

விடால் கனமழை பெய்து வருவதால் நாகை மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்ககடலில் புயல் உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயல் உருவாகும். மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வேகம் குறைந்து 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நாகைக்கு 320 கி.மீட்டர், சென்னைக்கு 500 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைக்கொண்டுள்ளது. 

44
Red Alert Withdrawal

Red Alert Withdrawal

இதனால், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சுவிடுகின்றனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
தமிழ்நாடு மழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK Vs CPM: ஆதரவை வாபஸ் பெறுவோம்.. தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை!
Recommended image2
CM Vijay Vs PM Modi: ஆபத்து! தமிழ்நாட்டிற்கு உடனே வேணும்.. விவசாயிகளுக்காக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம்
Recommended image3
Now Playing
செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ED! முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved