MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டோட்டல் காலி..! சென்னை குலுங்கவில்லை.. காலை வாரிய ஜிகே மணி.. அன்புமணி தான் டாப்

டோட்டல் காலி..! சென்னை குலுங்கவில்லை.. காலை வாரிய ஜிகே மணி.. அன்புமணி தான் டாப்

கூட்டம் சேர்க்க வேண்டும் என ஜி.கே.மணியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் காலை வாரிவிட்டது ராமதாஸை அதிருப்தி அடைய செய்துள்ளது.

2 Min read
Rayar r
Published : Dec 12 2025, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சென்னையில் பாமக போராட்டம்
Image Credit : Asianet News

சென்னையில் பாமக போராட்டம்

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்றக் கோரியும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடந்தது. 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

25
போராட்டத்துக்கு கூட்டமே வரவில்லை
Image Credit : Asianet News

போராட்டத்துக்கு கூட்டமே வரவில்லை

இந்த போராட்டம் குறித்து நேற்று பெருமையுடன் பேசிருந்த ராமதாஸ், 'பாமக நடத்தப்போகும் போராட்டத்தால் சென்னையே குலுங்கப் போகிறது பாருங்கள்' என்று சொல்லி இருந்தார். ஆனால் இன்று போராட்டத்துக்கு வந்த ராமதாஸுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 

ஏனெனில் போராட்டத்தில் கூட்டமே இல்லை. காலை 10 மணிக்கு போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், காலை 11.30 மணி வரையிலும் சுத்தமாக கூட்டமே வரவில்லை.

நாற்காலிகள் காலி

அங்கிருந்த நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தன. ராமதாஸ் தரப்பு பாமக தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் வரவில்லை. மேடைக்கு வந்த ராமதாஸின் ஆதரவாளர் ஜி.கே.மணி இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பொதுவாக ஒரு கட்சி கூட்டம் அல்லது போராட்டம் நடத்தப்போகிறது என்றால் முன்கூட்டியே அந்த கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு விடுவது வழக்கம்.

Related Articles

Related image1
சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை
Related image2
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
35
காலைவாரிய ஜி.கே.மணி; ராமதாஸ் அப்செட்
Image Credit : our own

காலைவாரிய ஜி.கே.மணி; ராமதாஸ் அப்செட்

ஆனால் நீண்ட நேரமாக கூட்டமே சேராததால் ஜி.கே.மணி உள்ளிட்ட ராமதாஸ் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நீண்ட நேரம் கழித்தே போராட்டத்துக்கு ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்கள் வந்தனர். அதுவும் அவர்கள் 500 முதல் 1,000 பேர் வரையில் தான் இருந்தனர். 

இந்த சொற்ப கூட்டத்தை பார்த்ததும் போராட்ட மேடைக்கு வந்த டாக்டர் ராமதாஸ் கடும் அப்செட் ஆகி விட்டாராம். கூட்டம் சேர்க்க வேண்டும் என ஜி.கே.மணியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் காலை வாரிவிட்டது ராமதாஸை அதிருப்தி அடைய செய்துள்ளது.

45
அன்புமணி கட்டுப்பாட்டில் பாமக
Image Credit : Asianet News

அன்புமணி கட்டுப்பாட்டில் பாமக

அன்புமணி ஆதரவாளர்கள், ராமதாஸ் ஆதரவாளர்கள் என பாமக பிரிந்து கிடக்கும் நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் அன்புமணி கட்டுப்பாட்டில் தான் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

அண்மையில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லியில் ராமதாஸ் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் சுத்தமாக கூட்டமே வரவில்லை. அதுவும் இந்திகாரர்களுக்கு பணம் கொடுத்து வந்து அவர்களுக்கு ராமதாஸின் முகமூடி போட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செய்தது நகைப்புக்குள்ளானது.

55
இனி ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. அருளை நம்பி பயனில்லை
Image Credit : X

இனி ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. அருளை நம்பி பயனில்லை

அடுத்தடுத்த இரண்டு போராட்டங்களில் ராமதாஸ் தரப்புக்கு கூட்டம் சேராதது பாமக அன்புமணி கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை பறைசாற்றுகிறது. இது அன்புமணி தரப்புக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமதாஸ் தரப்புக்கு கூட்டம் சேர்ந்து விடக்கூடாது என்று உறுதியாக இருந்த அன்புமணி கூட்டம் செல்வதை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இனி ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. அருளை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு ராமதாஸ் வந்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அனைவரின் எதிர்பார்ப்பு இதுதான்

திராவிட கட்சிகளுக்கு போட்டியளிக்ககூடிய அளவுக்கு பெரிய கட்சியாக பாமக இருக்கும் நிலையில், ராமதாஸும், அன்புமணியும் கருத்து வேறுபாடுகளை களைந்து விட்டு ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தூத்துக்குடியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படாது.. தெற்கு ரயில்வே அறிவிப்பு.. முழு விவரம்!
Recommended image2
நீதிபதிகளை மிரட்ட வெட்கமில்லையா..? ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒன்று திரளும் நீதிபதிகள்..!
Recommended image3
13 வருட ஏக்கம்.. தண்ணீர் தொட்டியில் முடிந்த சோகம்! என்ன தனியா தவிக்க விட்டு போயிட்டியே கணவர் கதறல்!
Related Stories
Recommended image1
சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை
Recommended image2
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved