MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உன்கிட்ட இருக்கிற எல்லா விசயமும் எனக்கு கிடைக்குமா? கல்லூரி மாணவியை மடக்க நினைத்த பேராசிரியர் சஸ்பெண்ட்!

உன்கிட்ட இருக்கிற எல்லா விசயமும் எனக்கு கிடைக்குமா? கல்லூரி மாணவியை மடக்க நினைத்த பேராசிரியர் சஸ்பெண்ட்!

திருச்சி மாவட்டம் முசிறி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர் நாகராஜன், மாற்றுத்திறனாளி மாணவியிடம் ஆபாசமாகப் பேசியதாக புகார் எழுந்துள்ளது. 9 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

1 Min read
vinoth kumar
Published : Sep 13 2025, 12:12 PM IST| Updated : Sep 13 2025, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்​லூரி​
Image Credit : Asianet News

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்​லூரி​

திருச்சி மாவட்​டம் முசிறி​யில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்​லூரி​யில் தமிழ்த் துறை பேராசிரிய​ராக பணியாற்றி வருபவர் நாக​ராஜன்(52). இவர், கல்​லூரி​யில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17வயது மாற்றுத்திறனாளி மாண​வி​யிடம் செல்போனில் ஆபாச​மாக பேசிய ஆடியோ சமூக வலை​தளத்​தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

24
கல்லூரி மாணவி
Image Credit : Asianet News

கல்லூரி மாணவி

அதில் உன்ன எனக்கு பிடிக்கும். அதனால் உன்கிட்ட மட்டும்தான் நான் கேட்க முடியும். இருப்பியா? மாட்டியா?... அத மட்டும் சொல்லு. உன்கிட்ட இருக்கிற எல்லா விசயமும் எனக்கு கிடைக்குமா? கிடைக்காதா? உன்னை கட்டி பிடிக்க கூடாது, முத்தம் கொடுக்கக் கூடாது என்றால் எதுக்கு பழகணும் சொல்லு என்று செல்போனில் அந்த மாணவிகளிடம் பேராசிரியர் கேட்கிறார். பேராசிரியர் நாகராஜனுக்கும், மாணவிக்கும் இடையே உரையாடல் 9 நிமிடம் 36 செகண்ட் தொடர்கிறது.

Related Articles

Related image1
எனக்கு நீ வேணும்! அந்த டிரஸ் போட்டுக்கிட்டு தலை நிறைய பூ வச்சுக்கிட்டு வா! ஜொல்லு விட்ட பேராசிரியருக்கு ஆப்பு!
Related image2
ஆபரேசனை பாதியில் விட்டுட்டு நர்ஸ் உடன் டாக்டர் செய்த அசிங்கம்! வெளியான அதிர்ச்சி சம்பவம்!
34
 பேராசிரியர் நாகராஜனிடம் விசா​ரணை
Image Credit : Asianet News

பேராசிரியர் நாகராஜனிடம் விசா​ரணை

இதுதொடர்​பாக, அரசு கலைக் கல்​லூரி முதல்​வர் கணேசன் மற்​றும் கல்​லூரி உள் விவ​கார விசா​ரணைக் குழு​வினர் விசா​ரணை நடத்​தினர். தொடர்ந்​து, திருச்சி மண்டல கல்​லூரிக் கல்வி இணை இயக்​குநர் ராதாகிருஷ்ணன் மற்​றும் மாவட்ட சமூக நலத் துறை அலு​வலர்​கள் அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் நாகராஜனிடம் விசா​ரணை நடத்​தினர்.

44
பேராசிரியர் நாக​ராஜன் சஸ்பெண்ட்
Image Credit : Asianet News

பேராசிரியர் நாக​ராஜன் சஸ்பெண்ட்

முதற்கட்ட விசாரணையில் தமிழ் துறை பேராசிரியரின் தவறு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கணேசன் தெரிவித்தார். இதையடுத்​து, துறைரீ​தி​யான விசாரணை அறிக்​கையை கல்​வித் துறை உயர் அலு​வலர்​களுக்கு கல்​லூரிக் கல்வி மண்டல இணை இயக்​குநர் ராதாகிருஷ்ணன் அனுப்​பி​வைத்​தார். அதன்​பேரில், பேராசிரியர் நாக​ராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருச்சி
கல்லூரி
குற்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved