விடுமுறை அதுவுமா தமிழகத்தில் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நாளை மின்தடை செய்யப்படும்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Power Outage in Tamil Nadu
Power cut across Tamil Nadu tomorrow: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக மின்தேவையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பெரும்பாலான வீடுகளில் 24 மணி நேரமும் பேன், ஏசி இயக்கப்பட்டு வருகிறது.
electricity maintenance Tamil Nadu
மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அன்றைய தினம் பழுதுகளை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
இதையும் படிங்க: 11ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்! கருணை மதிப்பெண் குறித்து தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
TN power shutdown
தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மின்தடை செய்யப்படுவது முழுவதுமாக தவிர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற அறிவிப்பை மின்சார வாரியம் வௌியிட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களுக்கு முக்கிய செய்தி! வந்தது புதிய மாற்றம்!
Erode power cut
ஈரோடு மாவட்டத்தில் மின்தடை
கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.