MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை! ஆனால்! ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு!

பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை! ஆனால்! ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு!

2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 17ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, மொத்தம் 6 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
vinoth kumar
Published : Jan 04 2025, 05:18 PM IST| Updated : Jan 06 2025, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pongal Festivel

Pongal Festivel

2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14 செவ்வாக்கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள் வருகிறது. இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும்.

இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல்! தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு! இதனால் என்ன பலன் தெரியுமா?

24
Pongal School Holiday

Pongal School Holiday

ஆகையால் சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் போகி பண்டிகைக்கு விடுமுறை அளித்தால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அப்படி இல்லை என்றால் ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவித்தால் 6 நாட்கள் விடுமுறை வரும். இதனால், பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வந்தனர். இந்நிலையில் ஜனவர 17ம் தேதி அரசு விடுமுறை  தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

34
Tamilnadu Government

Tamilnadu Government

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இவ்வாண்டு தமிழ்நாட்டில் ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15, 16, 18 மற்றும் 19 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பல தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

இதையும் படிங்க:  தமிழகத்தில் இனி மழை கிடையாது! ஆனால்! ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!

இதையும் படிங்க:  பொதுமக்களுக்கு குட்நியூஸ்! ஆவின் ஐஸ்கிரீம்! சூப்பர் ஆஃபர்!

44
School Holiday News

School Holiday News

அக்கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் அவர்கள், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு ஊழியர்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved