வரதட்சனை தராவிட்டால் நிர்வாண வீடியோ வெளியிடுவோம்..? இதெல்லாம் பொய் புகார்- பாமக எம்எல்ஏ சதாசிவம் விளக்கம்
நான் வரதட்சணை கேட்கும் ஆள் கிடையாது, வரதட்சணை கொடுக்கக் கூடிய ஆள் எனவே வரதட்சணை நாங்கள் கேட்கவும் இல்லை. அவர்கள் கொடுக்கவும் இல்லையென பாமக எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்துள்ளார்.
pmk
பாமக எம்எல்ஏ மீது புகார்
வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரையடுத்து பாமக எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி, மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் கொடுத்த மனோலியாவின் தந்தை முருகேஷன் கூறுகையில்,
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த எனது மகள் மனோலியாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு 500 பவுன் நகை கேட்ட நிலையில் 200 சவரன் நகையை கொடுத்தோம். மேலும் 45 லட்சம் மதிப்புள்ள கார் எம்எல்ஏ வீட்டில் இருந்து கேட்டுள்ளனர். ஆனால் தன்னால் முடியாது என மறுத்ததாகவும், இதனையடுத்து தன்னால் முடிந்த 25 லட்சம் மதிப்புள்ள கார் மட்டும் வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார்.
salem
வரதட்சனை கேட்டு கொடுமை
மேலும் 19 லட்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்களும் திருமணத்திற்காக வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார். திருமணம் முடிந்து அடுத்த ஒரு சில மாதங்களிலேயே மீண்டும் 50 சவரன் நகை கேட்ட நிலையில் மீண்டும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு நகை கொடுத்ததாக கூறினார். இந்த சூழ்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு சதாசிவம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிலையில் ஒரு கோடி ரூபாய் கடனாக கொடுத்தாதகவும்,
30 லட்சம் ரூபாய் தேர்தல் செலவுக்கு அன்பளிப்பாக கொடுத்தாகவும் முருகேஷன் தெரிவித்தார். இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் மீண்டும் வரதட்சனை கேட்டதால் தனது மகள் மனோலியா சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
salem
வரதட்சனை கேட்கவில்லை
தொடர்ந்து கூறிய அவர், தனது மகள் உடை இல்லாத வீடியோவை எடுத்து வைத்து எம்எல்ஏ வீட்டார் மிரட்டுவதாகவும் புகாரில் கூறியுள்ளதாக தெரிவித்தார். இந்தநிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த பாமக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், நான் வரதட்சணை கேட்கும் ஆள் கிடையாது, வரதட்சணை கொடுக்கக் கூடிய ஆள். வரதட்சணை நாங்கள் கேட்கவும் இல்லை. அவர்கள் கொடுக்கவும் இல்லையென கூறியவர், இது தவறான செய்தி என தெரிவித்தார். என்னிடம் எஃப் ஐ ஆர் எதுவும் வழங்கப்படவில்லை நூறு சதவீதம் பொய் புகார். என்னுடைய மருமகளுக்கு எதுவும் தெரியாது வழக்கறிஞர் சொன்னதை மனோலியா காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.
pmk
இதெல்லாம் சின்ன பிரச்சனை
என்னுடைய பெயருக்கும் பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக கூறினார். மேலும் குடும்ப சண்டை எல்லாருக்கும் உள்ளது. எம்எல்ஏ என்பது ஒரு பெரிய பதவி அதில் குடும்ப பிரச்சனையை சேர்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். நாங்கள் எல்லாம் புலி வேட்டைக்கு செல்பவர்கள். எலி வேட்டையை பார்க்க முடியாது. இதெல்லாம் சின்ன சின்ன பிரச்சனை என தெரிவித்தவர், வழக்கு விசாரணைக்கு கட்டாயம் ஒத்துழைப்பு தருவேன் என சதாசிவம் உறுதி அளித்தார்.
இதையும் படியுங்கள்