MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தப்பி தவறிகூட பகல் நேரத்தில் வெளியே போயிடாதீங்க! சுட்டெரிக்க போகுதாம் வெயில்! எச்சரிக்கும் வானிலை மையம்!

தப்பி தவறிகூட பகல் நேரத்தில் வெளியே போயிடாதீங்க! சுட்டெரிக்க போகுதாம் வெயில்! எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து வறண்ட வானிலை நிலவும். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Feb 12 2025, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தப்பி தவறிகூட பகல் நேரத்தில் வெளியே போயிடாதீங்க! எச்சரிக்கும் வானிலை மையம்

தப்பி தவறிகூட பகல் நேரத்தில் வெளியே போயிடாதீங்க! எச்சரிக்கும் வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றாலும் பனியின் தாக்கல் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் குளிர் வாட்டி வதைத்து வந்தாலும் பகல் நேரங்களில் வெயில் சட்டெரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் இப்படி என்றால் கோடை காலங்களில் இன்னும் உக்கிரமாக இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். 

25
வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் இயல்பை விட வெப்ப நிலை அதிகரித்து வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

35
வறண்ட வானிலை

வறண்ட வானிலை

14ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் 15 மற்றும் 18ம் தேதி  வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

45
வெப்பநிலை

வெப்பநிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

55
பனிமூட்டம்

பனிமூட்டம்

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு வானிலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved