MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ப்ளீஸ்.. என்னை தேடாதீங்க.. திருமணமான 18 நாளில் புதுப்பெண் தாலியை கழற்றிவிட்டு எஸ்கேப்! கணவருக்கு வந்த அதிர்ச்சி மெசேஜ்!

ப்ளீஸ்.. என்னை தேடாதீங்க.. திருமணமான 18 நாளில் புதுப்பெண் தாலியை கழற்றிவிட்டு எஸ்கேப்! கணவருக்கு வந்த அதிர்ச்சி மெசேஜ்!

திருமணமான 18 நாட்களில் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தன்னைத் தேட வேண்டாம் என்றும், விருப்பமில்லாத திருமணத்தால் கணவருடன் வாழ முடியாது என்றும் வாட்ஸ்-அப் வாய்ஸ் மெசேஜ் மூலம் தெரிவித்துள்ளார்.

2 Min read
vinoth kumar
Published : Nov 25 2025, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெற்றோர் முன்னிலையில் திருமணம்
Image Credit : stockPhoto

பெற்றோர் முன்னிலையில் திருமணம்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் திருமணத்திற்கு விருப்பம் இல்லாமல் இருக்கும் பெண்களை பெற்றோர் கட்டாயப்படுத்தி அவசர அவசரமாக திருமணம் செய்து வைப்பதால் இறுதியில் ஏமாந்து போவது ஆண்கள் தான். தற்போது கன்னியாகுமரியயில் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை கேசவன்சேரி விளையை சேர்ந்தவருக்கு 31 வயது இளைஞர். வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த 3-ம் தேதி இரு வீட்டார் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

24
 புதுப்பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப்
Image Credit : Asianet News

புதுப்பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப்

பிறகு மணமக்கள் இருவரும் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றபடி இருந்தனர். இந்நிலையில் திருமணமாகி 18 நாளில் அதாவது கடந்த 21ம் தேதி வெளியில் சென்று வருவதாக கூறிய புதுப்பெண் நீண்ட நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாமியார் நடந்த சம்பவத்தை மகனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மனைவியை கணவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போதும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. என்ன செய்வதன்று தெரியாமல் கணவர் ஆடிப்போனார்.

Related Articles

Related image1
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போ அக்கவுண்டில் வரும்? நாள் குறித்த துணை முதல்வர்
Related image2
நந்தினி மீது தீராத சந்தேகம்! நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் கங்காதரன்! அம்மா.. அம்மா.. கதறும் குழந்தைகள்!
34
தாலியை கழற்றிய பெண்
Image Credit : pinterest

தாலியை கழற்றிய பெண்

இந்நிலையில் கணவர் வீட்டின் அறையில் வந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தாலி செயின் மட்டும் இருந்தது. இதனால் தாலியை புதுப்பெண் கழற்றி வைத்து விட்டு சென்றிருக்கலாம் என நினைத்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வாலிபரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலமாக அவரது மனைவி வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார்.

44
வாய்ஸ் மெசேஜ்
Image Credit : Google

வாய்ஸ் மெசேஜ்

அதில், விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னை தேடாதீங்க, நான் வரமாட்டேன். தாலியைகூட வேண்டாம் என்று கழற்றி வைத்துவிட்டு வந்து விட்டேன். என்னால் உங்க கூட சந்தோஷமாக வாழ முடியல ‘ப்ளீஸ்’ என்று அனுப்பி உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருமணம்
பெண்கள்
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போ அக்கவுண்டில் வரும்? நாள் குறித்த துணை முதல்வர்
Recommended image2
நவம்பர் 27, விஜய் உடன் கைகோர்க்கும் செங்கோட்டையன்... அதிரும் அரசியல் களம்
Recommended image3
நந்தினி மீது தீராத சந்தேகம்! நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் கங்காதரன்! அம்மா.. அம்மா.. கதறும் குழந்தைகள்!
Related Stories
Recommended image1
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போ அக்கவுண்டில் வரும்? நாள் குறித்த துணை முதல்வர்
Recommended image2
நந்தினி மீது தீராத சந்தேகம்! நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் கங்காதரன்! அம்மா.. அம்மா.. கதறும் குழந்தைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved