MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாமக்கல் பரப்புரையில் மூச்சுத் திணறல்.. லேட்டாக வந்த விஜய்.. FIR-ல் அதிர்ச்சி தகவல்கள்

நாமக்கல் பரப்புரையில் மூச்சுத் திணறல்.. லேட்டாக வந்த விஜய்.. FIR-ல் அதிர்ச்சி தகவல்கள்

கரூர் சோகத்தைத் தொடர்ந்து, நாமக்கல்லில் நடந்த தவெக தலைவர் விஜய் கூட்டத்திலும் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

1 Min read
Raghupati R
Published : Sep 29 2025, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நாமக்கல் தவெக பரப்புரை கூட்ட நெரிசல்
Image Credit : Asianet News

நாமக்கல் தவெக பரப்புரை கூட்ட நெரிசல்

கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் கூட்டம் மிகவும் சோககரமாக முடிந்தது. கரூர் சம்பவத்தில் 41 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 17 பெண்கள், 9 குழந்தைகள் உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கிய மக்கள் மூச்சுத்திணறல், மயக்கம், மரக்கிளை உடைந்து விழுதல் போன்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மருத்துவமனைகளில் கதறி அழுத காட்சிகள் மாநிலம் முழுவதும் அதிர வைத்தது. இதேபோன்ற சூழல் நாமக்கல் மாவட்டத்திலும் நடந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

24
நாமக்கல்லில் விஜய் கூட்டம்
Image Credit : Asianet News

நாமக்கல்லில் விஜய் கூட்டம்

நாமக்கல்லில் நடந்த விஜய் பரப்புரைக் கூட்டத்திலும் பெரும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அங்கு கலந்து கொண்ட பலர் மூச்சுத் திணறல், சண்டை நிலை, இடர்பாடுகள் போன்ற நிலைகளைக் கையாள வேண்டி வந்தனர். குறிப்பாக, கூட்டம் அதிகமானதால் மக்கள் இடம் பிடிக்க முடியாமல் தள்ளப்பட்டனர். சிலர் திடீரென விழுந்து காயமடைந்தனர். மருத்துவமனைகள் சிலரை உடனே அனுமதித்து சிகிச்சை வழங்கினாலும், பெரும்பாலானோர் நெரிசல் காரணமாக மிகவும் பதற்றமடைந்தனர். நாமக்கல் சம்பவத்தில் பெரும்பாலும் காயம் அடைந்தோர் உயிரிழப்பு பெரிதும் இல்லை.

Related Articles

Related image1
விரைவில் அமித்ஷாவை சந்திக்கிறார் விஜய்..! கரூர் விவகாரத்தில் டெல்லி உடும்புப்பிடி..! பாஜகவின் புது ரூட்..!
Related image2
கரூர் செல்கிறாரா விஜய்?... 34 மணி நேரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த தளபதி
34
காவல்துறை வெளியிட்ட எப்ஐஆர்
Image Credit : X

காவல்துறை வெளியிட்ட எப்ஐஆர்

அதே சமயம் கரூரில் நிகழ்ந்தது போல் கூட்ட நெரிசல், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு மற்றும் கட்சி நிர்வாகிகளின் அனுமதியற்ற நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. நாமக்கல் டவுன் காவல் நிலைய FIR-ல் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் நாமக்கல்லில் வேண்டுமென்றே விஜய் வருகை தாமதமானது. அதனாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது.

44
தவெக நிர்வாகிகள்
Image Credit : SOCIAL MEDIA

தவெக நிர்வாகிகள்

பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டதை தவெக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை. மெயின் ரோடு வழியாக காலதாமதமாக வந்து போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தினார். பலமுறை எச்சரித்தும், அறிவுரையும் வழங்கிய தவெக நிர்வாகிகள், காவல்துறை சொன்னதைக் கேட்கவில்லை. நாமக்கல்லில் காத்திருந்த பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி அரசியல் பலத்தைக் காட்டும் நோக்கில் விஜய் வருகை 4 மணி நேரம் தாமதம் செய்தார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved