- Home
- Politics
- விரைவில் அமித்ஷாவை சந்திக்கிறார் விஜய்..! கரூர் விவகாரத்தில் டெல்லி உடும்புப்பிடி..! பாஜகவின் புது ரூட்..!
விரைவில் அமித்ஷாவை சந்திக்கிறார் விஜய்..! கரூர் விவகாரத்தில் டெல்லி உடும்புப்பிடி..! பாஜகவின் புது ரூட்..!
சதி நடந்திருப்பதாக சொல்வது, நீதிமன்றத்துக்குப் போயிருப்பது, ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பது எல்லாம் இதை நோக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே விஜயை சந்திக்க வேண்டும் என பாஜக தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

ரிப்போர்ட் அனுப்ப உத்ததரவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது தொண்டர்களும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டதாலும், நிகழ்ச்சியைத் தொடங்க தாமதம் ஏற்பட்டதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கரூர் சம்பவத்தை அறிந்து கொண்ட உடன் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் என பெருந்தலைவர்கள் அனைவரும் வேதனையோடு அறிக்கை விடுத்திருந்தனர். டெல்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு பேசி நிலவரத்தை கேட்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைகளை பற்றி விசாரித்து இருக்கிறார்கள். அடுத்து கரூர் சம்பவம் குறித்து ரிப்போர்ட் அனுப்பவும் உத்ததரவிட்டு இருக்கிறார்கள்.
சென்சிட்டிவாகப் பார்க்கும் டெல்லி தலைமை
அதே போல் ஆளுநர் மாளிகைக்கும் டெல்லி தலைமை போன் செய்து நிலவரத்தை விசாரித்து இருக்கிறது. ஆளுநர் ஆர்.என். ரவியிடமும் கரூர் சம்பவம் குறித்து ஒரு அறிக்கை அனுப்ப கேட்டு இருக்கிறது டெல்லி மேலிடம். அவரும் தமிழக அரசிடம் இப்போது கரூர் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டு இருக்கிறார்.
இந்த விவகாரத்தை டெல்லி தலைமை சென்சிட்டிவான விஷயமாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த சம்பவத்தின் திமுக அரசின் பங்கு என்ன? அவர்கள் இதனை எளிதாக கையாண்டார்களா? என்பதை உன்னிப்பாக உற்று நோக்க ஆரம்பித்துள்ளது பாஜக டெல்லி தலைமை. கரூர் கூட்டத்திற்கு போதிய பாதுகாப்புகளை திமுக அரசு கொடுக்கவில்லை. கேட்ட இடத்தை ஒதுக்கவில்லை. பல கெடுபிடிகளை விதித்தனர். விஜய் கூட்டம் நடந்த போது மின்சாரம் தடைபட்டது. ஜெனரேட்டரை ஆன் செய்ய முயன்றபோது அதன் கனெக்சன் வயரையும் கட் செய்து விடப்பட்டு இருந்தது.
புது ரூட் எடுக்கும் பாஜக தலைமை
அந்த நேரம் பார்த்து விஜய் மீது கூட்டத்தில் இருந்து செருப்பை வீசினார்கள். இன்னும் சில பேர் பேர் கூட்டத்தில் நுழைந்து பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது காவல்துறையினரும் தடியடி நடத்தினார்கள். இதனால்தான் ஒட்டுமொத்த கூட்டமும் சிதறி ஓடி இவ்வளவு பெரிய துயரம் நடந்து விட்டது. இது திமுகவோட திட்டமிட்ட சதி என தவெக தரப்பில், பாஜக சொல்கிற கருத்துக்களை பாஜக தலைமை உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டு அந்த கோணத்திலேயே இந்த பிரச்சனையை பார்த்து வருகிறது என்கின்றனர்.
தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருரூக்கு வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி சம்பா இடத்தை ஆய்வு செய்தும் வருகிறார். இந்நிலையில், பாஜக தலைமை விஜயை சந்திக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. பிஜேபி தரப்பில் இப்போதைக்கு சந்திக்க வேண்டும் என விஜய் தரப்பில் சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமித் ஷாவை சந்திக்கும் விஜய்..!
இதுகுறித்து டெல்லி சோர்ஸிடம் விசாரத்த போது, ‘‘இந்த 41 பேர் மரணத்தில் என்ன நடந்தது? என பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது. விஜய் தரப்பின் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருக்கலாம் என நம்புகிறது பாஜக. 'கொள்கை எதிரி' என விஜய் வசைபாடியதை தாண்டி இந்த விவகாரத்தில் சில முன்னெடுப்புகளில் அமித் ஷா கவனம் செலுத்தி வருகிறார்.
சதி நடந்திருப்பதாக சொல்வது, நீதிமன்றத்துக்குப் போயிருப்பது, ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பது எல்லாம் இதை நோக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே விஜயை சந்திக்க வேண்டும் என பாஜக தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விஜய் விரைவில் அமித் ஷாவை சந்திக்க உள்ளார்’’ என்கிறார்கள்.
தமிழக அரசு அருணா ஜெகதீசன் விசாரணை குழுவை அமைத்திருந்தாலும் இதில் மத்திய அரசு தலையிட்டு புதிய கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்பதால் திமுக தலைமை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை கலக்கத்தோடு எதிர் நோக்கிக் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.