MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தினமும் ஃபுல் மப்பில் வந்து ஓயாமல் மகளுக்கு டார்ச்சர்! மருமகனுக்கு மாமியார் கொடுத்த சூப்பர் பரிசு என்னனு பாருங்களே!

தினமும் ஃபுல் மப்பில் வந்து ஓயாமல் மகளுக்கு டார்ச்சர்! மருமகனுக்கு மாமியார் கொடுத்த சூப்பர் பரிசு என்னனு பாருங்களே!

சென்னையில், தினமும் குடித்துவிட்டு வந்து மகளைத் துன்புறுத்திய மருமகனை, மாமியார் கூலிப்படையை ஏவி தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மருமகன் அளித்த புகாரின் பேரில், போலீசார் கூலிப்படையைச் சேர்ந்தவரையும், மாமியாரையும் கைது செய்தனர்.

1 Min read
vinoth kumar
Published : Sep 27 2025, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதல் திருமணம்
Image Credit : our own

காதல் திருமணம்

தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக்காமல் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். மதுமட்டுமல்லாமல் கைப் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைக்கு ஏறிய போதையால் குழந்தை மற்றும் மனைவியை கொலை செய்யும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் தினமும் குடித்து விட்டு மகளுக்கு ஒயாமல் டார்ச்சர் செய்த மருமகனை மாமியார் கூலிப்படை ஏவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24
குடிபோதைக்கு அடிமையான மருமகன்
Image Credit : Asianet News

குடிபோதைக்கு அடிமையான மருமகன்

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பாபு(30). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடியான பாபு தினமும் குடித்து விட்டு வந்து காதல் மனைவியிடம் சண்டை போடுவதை பொழப்பாக வைத்துள்ளார்.

Related Articles

Related image1
பா*யல் வழக்கில் சிக்கி மூளை பிசகி ஸ்டாலினிடம் சரணடைந்த சீமானுக்கு MGR பேச என்ன தகுதி இருக்கு.! போட்டுப் பொளந்த அதிமுக!
Related image2
பாத்ரூமுக்கு சென்ற பெண்! வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த இளைஞர்! அதுவும் அரசு அலுவலகத்திலேயே இப்படியா?
34
கூலிப்படையை ஏவிய மாமியார்
Image Credit : X

கூலிப்படையை ஏவிய மாமியார்

நாளுக்கு நாள் கணவர் தொல்லை தாங்க முடியாததால் வேறு வழியில்லாமல் பாரதி தனது தாயார் ரசீதாவிடம் வேதனையை கொட்டித்தீர்த்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்ததது மட்டுமல்லாமல் ஆத்திரம் அடைந்துள்ளார். தனது மருமகனுக்கு சரியான பாடத்தை கட்டுக்கொடுக்க வேண்டும் என்பதால் மாமியார் சரித்திர பதிவேடு குற்றவாளியான சஞ்சய் சாய் என்பவரை ஏவி மருமகன் பாபுவை தாக்கியுள்ளார்.

44
போலீஸ் கைது
Image Credit : Google

போலீஸ் கைது

இந்த சம்பவம் தொடர்பாக பாபு ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிப்படையைச் சேர்ந்த சஞ்சய் சாய் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து மாமியார் ரசீதாவும் கைது செய்யப்பட்டார். மருமகனை மாமியாரே கூலிப்படையை ஏவி தாக்கிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
சென்னை
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved