MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எங்களோடு போட்டி போட உனக்கெல்லாம் தகுதியே இல்லை தம்பி.. ஒரே மேடையில் விஜய், இபிஎஸ்.ஐ காலி செய்த நேரு

எங்களோடு போட்டி போட உனக்கெல்லாம் தகுதியே இல்லை தம்பி.. ஒரே மேடையில் விஜய், இபிஎஸ்.ஐ காலி செய்த நேரு

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி என விஜய் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு எங்களோடு போட்டி போட உனக்கெல்லாம் தகுதியே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

2 Min read
Velmurugan s
Published : Sep 22 2025, 07:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுக.வுக்கு போட்டி தவெக..?
Image Credit : Asianet News

திமுக.வுக்கு போட்டி தவெக..?

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தமிழகத்தை தலைக்குனிய விடமாட்டேன் என்கிற தலைப்பில் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை இதே இடத்தில் விஜய் பரப்புரை செய்த நிலையில மறுதினமே திமுக சார்பில் இந்த கூட்டம் நடைபெற்றதால் அதிகளவு திமுகவினர் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசியதாவது, “ஏற்கனவே ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு ஊராக செல்கிறார். இந்த அரசு என்ன செய்து விட்டது என்றெல்லாம் சொல்கிறார். 10 ஆண்டில் செய்த காரியத்தை விட முதலமைச்சர் இந்த 4 ஆண்டுகளில்  செய்திருக்கிறார். உங்களுக்கு ஒன்று எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன். ஒரு காலத்தில் திமுகவில் இருந்து அதிமுக இப்படிதான் மாறி மாறி தமிழ் நாட்டில் இருந்தது. இன்றைக்கு இன்னொருவர் எங்களுடன் தான் நேரடியாக போட்டி என்கிறார்.

24
திமுகவோடு போட்டி போட தகுதி இல்லை..
Image Credit : F/KN Nehru

திமுகவோடு போட்டி போட தகுதி இல்லை..

திமுகவோடு போட்டி போட உனக்கு தகுதியே இல்லை தம்பி. பாலு சொன்னது போல் கலைவாணனிடம் சொன்னேன் நேத்துதான் கூட்டம் போட்டுவிட்டு போறான். நீ அடுத்த நாளே சொல்கிறாயே என்று நான் அடிச்சு காண்பிக்கிறேன் என்று இப்போது அடிச்சி காண்பிச்சாச்சு. எனவே இதை நான் சொல்வதற்கு காரணம் சும்மா இருந்தவனை கிளப்பிட்டீங்க இனிமேல் அது மீண்டும் 2026இல் தமிழ்நாட்டு முதலமைச்சராக தளபதி அவர்களை அமர வைக்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது.

Related Articles

Related image1
எனக்கு ஒரு ட‌வுட்டு! கடைசியில் தவெக தொண்டர்களை பார்த்து விஜய் கேட்ட 'அந்த' கேள்வி! அதிர்ந்த திருவாரூர்!
Related image2
தவெக.வுக்கு பெருகும் ஆதரவு.. அஞ்சி நடுங்கும் அரசியல் கட்சிகள் - TVK விஜய் பரபரப்பு அறிக்கை
34
4 வருடம் வீட்டிற்குள் இருந்த இபிஎஸ்
Image Credit : GOOGLE

4 வருடம் வீட்டிற்குள் இருந்த இபிஎஸ்

எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் முதலமைச்சராக இருந்தார். நான்கு வருடத்தில் அவர் என்ன செய்தார். எல்லாம் பூரா தெரியும். நாலு வருடம் கழித்து மக்களுடன் ஸ்டாலின் என்றெல்லாம் ஆரம்பிக்கிறாரே நான்கு வருடம் என்ன செய்தார் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்கிறார். நீ 4 வருடம் வீட்டில் இருந்துவிட்டு நாலு வருடம் கழித்து வெளியே வருகிறாயே நீ  எதற்கு வருகிறாயோ அதற்கு தான் நாங்களும் வருகிறோம்.

எனவே அதிமுக பாஜக கூட்டணி என்பது ஒரு அமையாத கூட்டணி. அதிமுக தொண்டர்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ளவில்லை. பாஜக வந்தால் அதிமுகவை கபளீகரம் செய்து விடும் என்று அதிமுக தொண்டர்கள் சொல்கிறார்கள். எனவே தான் நம்முடைய முதலமைச்சரை மக்களுக்காக உழைக்கிற முதலமைச்சரை காப்பது தான் நமது கடமை. பாலு சொன்னதைபோல அவரைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை. நிச்சயமாக இந்த டெல்டா பகுதி என்பது கழகத்தினுடைய கோட்டை. அதிலும் திருவாரூர் என்பது மிக முக்கிய கோட்டை.

44
நாட்டிலேயே அதிக தொழிற்சாலை இருப்பது தமிழகத்தில் தான்..
Image Credit : Asianet News

நாட்டிலேயே அதிக தொழிற்சாலை இருப்பது தமிழகத்தில் தான்..

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலை இருப்பது தமிழ்நாட்டில் தான். அதிக பெண்கள் வேலை பார்ப்பதும் தமிழ்நாட்டில் தான். எனவே தான் இந்த நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்கிற தளபதி அவர்களை நாம் கலைஞரை இழந்து விட்டோம் இவர்தான் நமக்கு சரியான ஆள். இவரை மீண்டும் மீண்டும் முதலமைச்சராக்கி இந்த நாட்டுக்கு உண்டாக்கிட வேண்டும் அதற்காக நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

டிஆர்பி ராஜாவை பார்த்து அவனிடம் சொன்னேன் நான். பஸ் ஸ்டாண்ட் கேட்டான் பஸ்டாண்டு கொடுத்தோம் ரோடு கேட்டான் ரோடு கொடுத்தோம். நூலகம் கொடு என்றான் நூலகம் கொடுத்தோம். சிலை வைக்கணும் என்றான் சிலை வைத்தோம். பாலம் கொடுத்தோம், ஒரே ஒரு தொழிற்சாலை திருச்சிக்கு கொடு என்றால் அவன் கொடுக்க மாட்டேன் என்கிறான்.

நம்முடைய கழக ஆட்சி என்பது சிறந்த ஆட்சி நம்மையெல்லாம் வாயை கட்டி போட்டு மேடையில் ஏற்றி விட்டார்கள். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் மேற்கொண்டு நாங்கள் எதையும் சொல்ல முடியாது. இந்த கழகத்தை கட்டி காப்பது தான் நமது தலையாய கடமை என்று பேசினார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
எடப்பாடி பழனிசாமி
டிவி.கே. விஜய்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved