கே.என்.நேருவை விடாமல் சுத்துப்போடும் அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!
KN Nehru: அமலாக்கத்துறை அனுப்பிய தகவல்களில் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளது. எனவே அந்த கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உத்தரவு பிறப்பித்தது.

அமைச்சர் கே.என்.நேரு
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக கூறி அத்துறையை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
அமலாக்கத்துறை கடிதம்
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி ஏற்கனவே அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அமர்வு அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளது. எனவே அந்த கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை
ஆனால் இதுவரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை தலைமை நீதிபதி அமர்வில் ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் தமிழ் செல்வன் ஆஜராகி நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என முறையிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் முறையீடு
இதனை கேட்ட நீதிபதிகள், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு நாட்கள் தானே ஆகிறது. தேவைப்பட்டால் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கமான முறையில் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய தற்போது ஐ.எஸ்.இன்பதுரை முடிவு செய்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுக்கு எதிராக அடுத்தடுத்து அஸ்திரங்களை அதிமுக ஏவி வருவது முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

