MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் உரிமை தொகை: ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா? விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு

மகளிர் உரிமை தொகை: ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா? விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு

 மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு போட்டியாக, அதிமுக ரூ.2000 வழங்கும் குலவிளக்கு திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால், ஆளும் திமுக அரசு உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 27 2026, 10:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மகளிர் உரிமை தொகை
Image Credit : tndipr

மகளிர் உரிமை தொகை

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், யாரையும் எதிர்பார்க்காமல் சுய தொழில் செய்து வாழ வேண்டும் என்பதற்காவும் பல்வேறு அசத்தலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக மற்றவர்களை கையை எதிர்பார்க்காமல் வாழும் வகையில் திமுக அரசால் மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டது.

26
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000
Image Credit : Google

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000

அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் மாதந்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக திமுகவின் செல்வாக்கு உயர்ந்தது. ஆகையால் தமிழ்நாட்டை பின்பற்றி புதுச்சேரி, கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Related image1
அதிகாலையிலேயே பதறிய தமிழகம்.. பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! யார் இந்த அழகுராஜா?
Related image2
ஹேப்பி நியூஸ்.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?
36
தமிழகத்தை பின்பற்றும் பல்வேறு மாநிலங்கள்
Image Credit : x

தமிழகத்தை பின்பற்றும் பல்வேறு மாநிலங்கள்

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்கும் வகையில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். அதாவது 2வது கட்டமாக புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதன்மூலம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1,30,69,831 ஆக உயர்ந்துள்ளது.

46
விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
Image Credit : magalir urimai thogai

விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மேலும் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்து நிராகரிப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். அவர்களின் விண்ணப்பம் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,500 உயர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது.

56
குலவிளக்கு திட்டம் ரூ.2000
Image Credit : our own

குலவிளக்கு திட்டம் ரூ.2000

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் ஸ்டாலினே அதிர்ச்சியாகும் அளவிற்கு அதிமுக முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், குலவிளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும். குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

66
உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை
Image Credit : our own

உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை

எதிர்க்கட்சியான அதிமுகவே ரூ.2000 அறிவித்துள்ள நிலையில் ஆளும் திமுக அரசு ரூ.2,500 கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் குடும்ப தலைவிகள் இருந்து வருகின்றனர். அதிமுக எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மகளிர் உரிமை தொகையை எவ்வளவு உயர்த்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பான அறிவிப்பு பிப்ரவரியில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிகாலையிலேயே பதறிய தமிழகம்.. பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! யார் இந்த அழகுராஜா?
Recommended image2
மக்களே... இன்று காலை 9 மணி முதல் மின்தடை.! எந்தெந்த பகுதிகளில்! இதோ முழு லிஸ்ட்!
Recommended image3
Tamil News Live today 27 January 2026: மகளிர் உரிமை தொகை - ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா? விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு
Related Stories
Recommended image1
அதிகாலையிலேயே பதறிய தமிழகம்.. பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! யார் இந்த அழகுராஜா?
Recommended image2
ஹேப்பி நியூஸ்.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved