MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. குடையை மறக்காதீங்க மக்களே.!

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. குடையை மறக்காதீங்க மக்களே.!

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது இயல்பை விட 7% குறைவாக பதிவாகியுள்ளது.

2 Min read
Raghupati R
Published : Nov 16 2025, 01:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழ்நாடு வானிலை அப்டேட்
Image Credit : our own

தமிழ்நாடு வானிலை அப்டேட்

தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்தது மேலடுக்கு சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மாற்றத்தின் தாக்கமாக, இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆரம்பமாக இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று முன்பே எச்சரிக்கை விடப்பட்டது.

24
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Image Credit : Google

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

வானிலை துறை வெளியிட்ட தகவலின் படி, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் புதுச்சேரி பகுதிகளிலும் பலத்த மழை சாத்தியம் உள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ஒட்டுமொத்த தமிழர்களின் வாக்குரிமையும் பறிக்கப்படலாம்.. விஜய் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Related image2
சென்னையில் இன்றும், நாளையும் மழை பொளந்து கட்டப்போகுதாம்! வானிலை மையம் கொடுத்த வெதர் அப்டேட்!
34
வடகிழக்கு பருவமழை குறைவு
Image Credit : Google

வடகிழக்கு பருவமழை குறைவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியிருந்தாலும், ஒன்றரை மாதங்கள் கடந்த பல மாவட்டங்களுக்கு போதுமான மழை இல்லை. அதுபோல் இருந்தாலும், இன்று காலை 8 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பதிவானது. மொத்த மழைப்பொழிவு கணக்கெடுப்பில், திருநெல்வேலி அதிகபட்சமாக 477.0 மிமீ மழையைப் பெற்றுள்ளது. சதவீத அளவில் திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்களில் +61% அதிக மழை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயல்பை விட -52% குறைவு காணப்படுகிறது. மொத்தத்தில், தமிழ்நாடு–புதுச்சேரி சராசரி மழை 257.9 மிமீ; இது இயல்பை விட -7% குறைவாகும்.

44
அடுத்த நாட்களில் மழை எப்படி இருக்கும்?
Image Credit : our own

அடுத்த நாட்களில் மழை எப்படி இருக்கும்?

இந்த மாத இறுதி வரை வடக்கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் வெதர்மேன் பிரதீப் ஜான். மேலும், இன்று காலை 9 மணிக்கு சென்னை வெதர்மேன் வெளியிட்ட தகவலில், “இலங்கை கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. புதுச்சேரி–நாகப்பட்டினம் இடையே மழை தொடங்கியுள்ளது. நாளை முதல் வட தமிழகத்தில் மழை அதிகரிக்கும்,” என கூறப்பட்டுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved