MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரொம்ப ரொம்ப கம்மியான வட்டியில் தனி நபர் கடன்.! கூட்டுறவு வங்கியில் லோன் மேளா- அசத்தல் அறிவிப்பு

ரொம்ப ரொம்ப கம்மியான வட்டியில் தனி நபர் கடன்.! கூட்டுறவு வங்கியில் லோன் மேளா- அசத்தல் அறிவிப்பு

சென்னையில் டாப்செட்கோ மற்றும் டாம்கோ மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கு ரூ. 400 இலட்சம் கடன் உதவி வழங்கப்படவுள்ளது. ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 28 வரை கூட்டுறவு வங்கிகளில் லோன் மேளாக்கள் நடைபெறும்.

2 Min read
Ajmal Khan
Published : Jul 03 2025, 10:52 AM IST| Updated : Jul 03 2025, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வங்கியில் கடன் முகாம்கள்
Image Credit : our own

வங்கியில் கடன் முகாம்கள்

மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் சொந்த தொழில் தொடங்க தனி நபர் கடன், சுய உதவிக்குழு கடன்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் சுயதொழில் தொடங்கவும், பொருளாதார முன்னேற்றம் அடையவும் உதவப்படுகிறது. மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு தனிநபர் கடன், குழு கடன், கறவை மாட்டு கடன், சிறு/குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன.

 கூட்டுறவு கடன் அமைப்புகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்திற்கான கடன்கள் வழங்கப்படுகின்றன.

25
கடன் உதவி திட்டம் லோன் மேளா முகாம்கள்
Image Credit : Asianet News

கடன் உதவி திட்டம் லோன் மேளா முகாம்கள்

இந்த நிலையில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் சென்னை மாவட்டத்தில். 2025-26ஆம் ஆண்டிற்கான டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் உதவி திட்டம் லோன் மேளா முகாம்கள் நடைபெறவுள்ளது.  இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், 

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தனிநபர் கடன், பெண்கள்/ஆண்களுக்கான சுயஉதவி குழு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு ரூ.300.00 இலட்சம் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
அடுத்தடுத்து விடுமுறை.! அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு கொண்டாட்ட செய்தியை சொன்ன போக்குவரத்து துறை
Related image2
தொழிற்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு குட் நியூஸ்.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட அரசு
35
100 லட்சம் கடன்கள் வழங்க இலக்கு
Image Credit : google

100 லட்சம் கடன்கள் வழங்க இலக்கு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் கடன் திட்டங்களான தனிநபர் கடன். சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு ரூ.100.00 இலட்சம் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

45
கூட்டுறவு வங்கியில் கடன் திட்டம்
Image Credit : our own

கூட்டுறவு வங்கியில் கடன் திட்டம்

டாப்செட்கோ/ டாம்கோ கடன் உதவி திட்டங்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைய ஏதுவாக கீழ்கண்ட அட்டவணைப்படி லோன் மேளா சென்னையில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தணைடையார் பேட்டை, பெரம்பூர், திருவிக நகர், கொடுங்கையூர் பகுதியில் மாலை 4 மணிக்கு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
லோன் மேளா - பயன்பெற அழைப்பு
Image Credit : our own

லோன் மேளா - பயன்பெற அழைப்பு

எனவே, டாப்செட்கோ/ டாம்கோ கடன் உதவி திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும். சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மக்கள் / கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் உரிய ஆவணங்களுடன் மேற்படி லோன் மேளா நடைபெறும் முகாம்களில் அணுகி விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து. கடன் உதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
மகளிர் உரிமைத் தொகை
பெண் அதிகாரம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved