MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.! ஆட்சியர் அறிவிப்பு- ஏன் தெரியுமா.?

சென்னையில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.! ஆட்சியர் அறிவிப்பு- ஏன் தெரியுமா.?

சென்னையில் நாளை 7 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக வரும் 21.06.2025 (சனிக்கிழமை) இந்த பள்ளிகள் இயங்கும்.

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Jun 05 2025, 09:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
Image Credit : iSTOCK

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அந்த வகையில் சுமார் 45 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் மீண்டும் பள்ளிகளுக்கு எப்போது விடுமுறை கிடைக்கும் என ஆவலோடு காத்துள்ளனர். 

இதற்காக காலண்டரில் விடுமுறை நாட்கள் உள்ளதா என தேடிப்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

23
சென்னையில் கோயில் திருவிழா
Image Credit : Asianet News

சென்னையில் கோயில் திருவிழா

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகட வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அ/மி கங்காதரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவின் ஒரு பகுதியாக வருகிற 06.06.25 வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது.

33
சென்னையில் சில பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : Facebook

சென்னையில் சில பள்ளிகளுக்கு விடுமுறை

இத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு 06.06.2025 (நாளை) இக்கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கீழ்க்காணும் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடதெரிவித்துள்ளார். இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.06.2025 (சனிக்கிழமை) கீழ்க்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் புரசைவாக்கம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார்  4000ஆயிரம் மாணவர்களுக்கு நாளை விடுமுறை கிடைத்துள்ளது. .

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பள்ளி மாணவர்
பள்ளிகள் விடுமுறை
பள்ளிக் கல்வித் துறை
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்றும் தரமான சம்பவம் இருக்காம்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
Recommended image2
திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
Recommended image3
கே.என்.நேருவை விடாமல் சுத்துப்போடும் அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved