MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிகாலையில் அதிர்ந்த தூத்துக்குடி.. குலசையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

அதிகாலையில் அதிர்ந்த தூத்துக்குடி.. குலசையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு அணிந்து தரிசனம் செய்தனர்.

1 Min read
Velmurugan s
Published : Sep 23 2025, 08:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா
Image Credit : Asianet News

கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.

24
அதிகாலையில் நடைபெற்ற கொடியேற்றம்
Image Credit : Asianet News

அதிகாலையில் நடைபெற்ற கொடியேற்றம்

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதன் முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் இந்த கொடியேற்றமானது இன்று துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 3.00 மணிக்கு கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

Related Articles

Related image1
தசரா விழாவால் குலுங்கிய குலசேகரபட்டினம்…. 6 லட்சம் கொண்டாடிய முத்தாரம்மன் கோவில் சூரம்சம்ஹாரம் !!
Related image2
லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் சூரனை வதம் செய்த குலசை முத்தாரம்மன்
34
கொடியேற்றத்தை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள்
Image Credit : Asianet News

கொடியேற்றத்தை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள்

அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் திருகாப்பு அணிந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.

44
2ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம்
Image Credit : Asianet News

2ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம்

திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் எழுத்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 2-ம் தேதி நள்ளிரவில் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தூத்துக்குடி
ஆன்மீகம்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved