MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Tamil Nadu News
  • ரயில் பயணிகளே! கொல்லம்-தென்காசி-சென்னை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்! புதிய அட்டவணை இதோ!

ரயில் பயணிகளே! கொல்லம்-தென்காசி-சென்னை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்! புதிய அட்டவணை இதோ!

கொல்லத்தில் இருந்து தென்காசி வழியாக சென்னை தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்ப்ட்டுள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Aug 26 2025, 08:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kollam Tambaram Express New Timings 2025
Image Credit : Google

Kollam-Tambaram Express New Timings 2025

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து இதே வழியாக கொல்லத்துக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கொல்லத்துக்கு தென்காசி, புனலூர் வழியாக இயக்கப்படும் ஒரே ரயில் இது என்பதால் பயணிகள் மத்தியில் எப்போதும் கிராக்கி அதிகம். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து 5.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 7.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்
Image Credit : Google

கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

இதேபோல் கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் இப்போது எழும்பூரில் பணிகள் நடப்பதால் சில மாதங்களாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில், கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16102) வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 7.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Articles

Related image1
அடி தூள்.! சோதனை ஓட்டம் நிறைவு... போரூர்- பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் எப்போது இயக்கும்.?
Related image2
தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி! ரயில் போக்குவரத்தில் அதிரடி மாற்றம்!
35
கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் புதிய அட்டவணை
Image Credit : our own

கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் புதிய அட்டவணை

கொல்லம் 16.00 (தினமும் புறப்படும் நேரம்)

குண்டரா 16.06/16.08

கொட்டாரக்கரா 16.15/16.17

ஆவணேஸ்வரம் 16.28/16.30

புனலூர் 16.55/17.00

தென்மலை 17.43/17.45

ஆரியங்காவு 18.13/18.15

செங்கோட்டை 19.10/19.15

தென்காசி 19.28/19.30

கடையநல்லூர் 19.43/19.45

சங்கரன்கோவில்20.08/20.10

ராஜபாளையம் 20.33/20.35

ஸ்ரீவில்லிபுத்தூர் 20.48/20.50

சிவகாசி 21.03/21.05

விருதுநகர் 21.43/21.45

மதுரை 22.25/22.30

திண்டுக்கல் 23.25/23.30

திருச்சி 01.45/01.50

விருத்தாசலம் 03.33/03.35

உளுந்தூர்பேட்டை 03.49/03.50

விழுப்புரம் 04.40/04.42

செங்கல்பட்டு 06.28/06.30

தாம்பரம் 07.30 (வந்து சேரும் நேரம்)

45
அட்டவணை மாற்றம் ஏன்?
Image Credit : Google

அட்டவணை மாற்றம் ஏன்?

இந்த ரயில் கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கே வந்து விடுவதால் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் பேருந்து, புறநகர் ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் 2.30 மணிக்கே தாம்பரம் வந்து விடுவதால் தூக்கம் கெட்டு விடுவதாகவும் கொல்லத்தில் இருந்து தாமதமாக புறப்பட்டு தாம்பரத்துக்கு 5 மணிக்கு மேல் வந்து சேரும் வகையில் அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

55
தென்காசி மக்களுக்கு நற்செய்தி
Image Credit : our own

தென்காசி மக்களுக்கு நற்செய்தி

கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு (கொல்லம் தாம்பரம்), மதியம் 12.10 மணிக்கு (குருவாயூர் மதுரை) என 2 ரயில்கள் தென்காசிக்கு அடுத்தடுத்து புறப்பட்டன. இதையடுத்து இரவு 11.10 மணிக்கு தான் தென்காசிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இருந்தது. மாலையில் தென்காசிக்கு ரயில் இல்லாமல் இருந்து வந்தது. இப்போது சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டது கொல்லத்தில் இருந்து தென்காசி, ராஜபாளையம் மக்களுக்கு வசதியாக அமைந்துள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரயில்
தென்னக இரயில்வே
இந்திய இரயில்வே
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கிருஷ்ணகிரி சிப்காட்டை குப்பைக் கிடங்காக மாற்றுவதா? - சௌமியா அன்புமணி
Recommended image2
Anbil Mahesh : ரூ.100 கோடி ஊழல் புகார் எதிரொலி... முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் திடீர் ரெய்டு
Recommended image3
Tomorrow Power Cut: நாளைக்கு பவர் கட்..உங்க ஊர் பெயர் இருக்கா? முழு லிஸ்ட்டையும் செக் பண்ணுங்க!
Related Stories
Recommended image1
அடி தூள்.! சோதனை ஓட்டம் நிறைவு... போரூர்- பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் எப்போது இயக்கும்.?
Recommended image2
தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி! ரயில் போக்குவரத்தில் அதிரடி மாற்றம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved