MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த முனங்கல் சத்தம்! கதவை திறந்து பார்த்தவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி!

கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த முனங்கல் சத்தம்! கதவை திறந்து பார்த்தவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், மீனவர் ஒருவர் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக பிடித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில், கள்ளக்காதலன் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

1 Min read
vinoth kumar
Published : Nov 12 2025, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர், தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் மீன் பிடிக்க செல்லும் போதெல்லாம் மனைவி வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

24
Image Credit : Google

நேற்று முன்தினம் இதுதொடர்பாக தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் 2 பேரும் தனித்தனி அறையில் தூங்க சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென சத்தம் கேட்டதை அடுத்து கணவர் கண் விழித்து பார்த்துள்ளார். கோபத்தில் மனைவி ஏதாவது விபரீத முடிவு எடுத்து விடப்போகிறார் என்ற அச்சத்தில் அவரது அறையின் கதவை திறந்து பார்த்த போது கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Related Articles

Related image1
ஏண்டா! போலீஸ் கோட்ரஸில் புகுந்து வெட்டுவீங்களா! குற்றவாளிகளின் தற்போதைய நிலை! கொலைக்கான அதிர்ச்சி காரணம்!
Related image2
சட்டுபுட்டுனு வேலையை முடிங்க! தமிழகம் முழுவதும் நாளை 5 முதல் 8 மணி வரை மின்தடை! இதோ லிஸ்ட்!
34
Image Credit : Getty

தான் வீட்டில் இருக்கும் போதே கள்ளக்காதலனை அறைக்கு வரவழைத்து அவருடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த மீனவர் ஆத்திரத்தில் 2 பேரையும் சரமாரியாக வெளுத்து வாங்கினார். இதனால் கள்ளக்காதலனுக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

44
Image Credit : our own

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கள்ளக்காதலன் பிளேடை எடுத்து, தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். இதையடுத்து கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
பெண்கள்
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved