பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு.! நகைக்கடன் தள்ளுபடி.! தமிழக அரசு சரவெடி!
திமுக அரசு 2021 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்தது. இந்த திட்டத்தால் சுமார் 11.70 லட்சம் பேர் பயனடைந்த நிலையில், வரவிருக்கும் தேர்தலையொட்டி மீண்டும் இதே போன்ற அறிவிப்பு வருமா?

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் அவசர பண தேவைகளுக்கு தங்க நகைகளை அடகு வைப்பது மக்களின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. அதாவது அடகு கடை மற்றும் வங்கிகளில் அதிக வட்டி என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் அதுவும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கூட்டுறவு வங்கியை நாடுகின்றனர். மற்றொரு காரணம் மாநில அரசுகள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்படும் நகைகடன் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையிலும் வைக்கின்றனர்.
இந்நிலையில் திமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால், ஐந்து சவரன் வரையிலான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். இந்த வாக்குறுதியானது குறிப்பாக ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் 2021 செப்டம்பர் 13 அன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 31 மார்ச் 2021 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட ஐந்து சவரன் அல்லது அதற்கு குறைவான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
தமிழக அரசு அறிவித்த இந்த உத்தரவால் சுமார் 13.12 லட்சம் பேர் பயனடைந்தனர், மொத்தம் 4,818.88 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதே போல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2,755.99 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன, இதனால் 1,17,617 குழுக்கள் பயனடைந்தன.
திமுகவின் தங்க நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி, 2021 சட்டமன்ற தேர்தலில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது மற்றும் ஆட்சிக்கு வந்த பிறகு இது பெருமளவு நிறைவேற்றப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்தாலும், செயல்படுத்தலில் சில குறைபாடுகள் இருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளித்தது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று, 31.03.2021 வரை நிலுவையிலிருந்த நகைக் கடன் ரூ. 6,000 கோடி தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது.
அதன்படி, 11.70 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்குத் தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கும் அரசியல் கட்சிகள் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

