MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் உரிமை தொகையில் கூடுதலாக இத்தனை லட்சம் பேர் சேர்க்க போறாங்களா.? வெளியாகவுள்ள புதிய அறிவிப்பு

மகளிர் உரிமை தொகையில் கூடுதலாக இத்தனை லட்சம் பேர் சேர்க்க போறாங்களா.? வெளியாகவுள்ள புதிய அறிவிப்பு

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் தற்போது 1கோடியஏ 15 லட்சம் பேர் பயன்பெற்று வரும் நிலையில், தேர்தல் முடிவுக்கு பிறகு கூடுதலாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை இணைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

2 Min read
Ajmal Khan
Published : May 23 2024, 11:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
magalir urimai thogai

magalir urimai thogai

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாமல் திணறிய திமுக கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. முன்னதாக திமுகவின் தேர்தல் வாக்குறுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மகளிர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு என அறிவிப்பு வெளியானது. 

25

மகளிர் உரிமை தொகை

ஆனால் இதில் முக்கிய அறிவிப்பாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தான் அந்த அறிவிப்பின் படி கடந்த 2023ஆம் ஆண்டு முதல் மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனாளர்களாக சேர்க்கப்பட்டு 2023 ஆண்டு செப்டம்பர் முதல்   உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. 

35

மகளிர் உரிமை தொகை

அப்போது இன்னும் பல லட்சம் பேருக்கு உரிமை தொகை வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டதை ஒரு கோடி 15 லட்சம் பேர் என மாற்றியமைக்கப்பட்டது. 

இந்தசூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி செல்லமிடமெங்கும் மகளிர் உரிமை தொகை தங்களுக்கு கிடைக்கவில்லையென புகாராக தெரிவிக்கப்பட்டது. 

45

புதிய பயனாளிகள்

அப்போதே தேர்தல் முடிவு வந்த பிறகு மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி மகளிர் உரிமை தொகையில் புதிய பயனாளிகள் சேர்க்கும் திட்டம் ஜூலை மாதம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

55

2.30 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகை

தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி, இந்த முறை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு,  முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கு, புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved