MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஷாக்கிங் நியூஸ்! ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ந்தவர் சென்னையில் சிக்கினார்!

ஷாக்கிங் நியூஸ்! ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ந்தவர் சென்னையில் சிக்கினார்!

தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 28 2025, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிகாலையில் அதிர்ச்சி! ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ந்தவர் சென்னையில் சிக்கினார்!

அதிகாலையில் அதிர்ச்சி! ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ந்தவர் சென்னையில் சிக்கினார்!

தீவிரவாத செயல்களை தடுக்கவும், வெளிநாட்டில் உள்ள தடை செய்யப்பட்ட இயங்கங்களுக்கு ஆதரவாகவும் ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுபவர்களின் வீடுகளில் அவ்வப்போது தேசிய புலனாய்வு முகமை அமைப்பான என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனையின் போது செல்போன், கணிணி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சோதனை செய்யப்படும், அதில் தீவிரவாதத்தை ஊக்குவித்து கருத்துகளை வெளியிட்டிருந்தாலோ அல்லது குண்டு வெடிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு திட்டமிட்டிருந்தாலோ கைது செய்யப்படுவார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
National Investigation Agency

National Investigation Agency

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் பகுதியில் இன்று அதிகாலை முதல் 15 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பானது. 

34
ISIS

ISIS

அப்பகுதியில் வசித்து வரும் பாசித், நபீன் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்த புகாரில் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலை சேர்ந்த அல் பாசித் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் மூளைச்சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

44
NIA Raids

NIA Raids

பழைய வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நநடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆய்வு நிறைவடைந்த பின்னரே சோதனை குறித்த முழு விவரம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK Vijay Cabinet Ready: தமிழக அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? வெளியான தகவல்.. யார் யாருக்கு வாய்ப்பு!
Recommended image2
Now Playing
தவெக கூட்டணி பேச வந்தார்கள்; ஆனால் அவர்களை EPS உதாசீனப்படுத்தினார் ! சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி
Recommended image3
TN Midterm Polls : இடைத்தேர்தலுக்கு ரெடியா.! திமுகவினருக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு.! அதிர்ச்சியில் தவெக
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved